ஷார்ஜாவில் தொடங்கியது வர்த்தக கண்காட்சி!
ஷார்ஜாவின் எக்ஸ்போ சென்டரில் வர்த்தகக் கண்காட்சி தொடங்கியது
ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் பிளாஸ்டிக், பிரிண்டிங், பேக்கேஜிங், டிஜிட்டல் மற்றும் விளம்பர பலகை, மோல்டு மேக்கிங் உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் வர்த்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த கண்காட்சியை ஷார்ஜா துறைமுகம் மற்றும் சுங்கவரித்துறை தலைவர் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் கண்காட்சியில் உள்ள அரங்குகளை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சிக்கு வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொடக்க நிகழ்ச்சியில் சார்ஜா எக்ஸ்போ செண்டரின் தலைமை செயல் அலுவலர் சைப் முகம்மது அல் மித்பா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.













Click it and Unblock the Notifications