லீ குவான் யூ உடலுக்கு 7 நாட்கள் அஞ்சலி... மார்ச் 29ல் அரசு மரியாதையுடன் அடக்கம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் பிரதமரும் தேசத்தந்தை என்று போற்றப்படுபவருமான லீ குவான் யூ உடல் ஒருவார அஞ்சலிக்குப் பின்னர் வரும் 29 ஆம் தேதி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த லீ இன்று அதிகாலை 3.18 மணிக்கு உயிரிழந்ததாக சிங்கப்பூர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குட்டி நாடாக இருந்தாலும், பொருளாதார வல்லரசாக மாற்றியவர் லீ. அதோடு பலமிக்க ராணுவத்தை கொண்டதாக சிங்கப்பூர் மாறியதற்குக் காரணம் இதற்கு லீயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஆகும்.
கடந்த 1963ஆம் ஆண்டு, சிங்கப்பூரை இந்தோனேஷியா படை தாக்கியது. அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிங்கப்பூர் தவித்தது.
இந்த தாக்குதலுக்கு பின்னர், பலமான ராணுவத்தை உருவாக்க நினைத்தார் லீ. உடனடியாக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அமல்படுத்தினார். 1967ம் ஆண்டு சிங்கப்பூரில் கட்டாய ராணுவ சேவை அறிமுகமானது. இதனால், சிங்கப்பூர் ராணுவம் பலம் கொண்டதாக மாறியது.
31 ஆண்டுகாலம் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலையில் அவர் மரணமடைந்தார்.
அவரது இன்று முதல் மார்ச் 28 வரை அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக நாடாளுமன்ற வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். லீயின் உடன் மார்ச் 29 அன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications