வரலாறு காணாத பனிப்புயல்... வெறிச்சோடிய நியூயார்க்... வீட்டை விட்டு வெளியே வந்தால் அபராதம்!
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் கனடாவில் வரலாறு காணாத பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் அங்கு பெரும் ஸ்தம்பிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் குளிர்காலப் புயல் காரணமாக 90 செ.மீ அளவுக்கு பனிப் பொழிவு ஏற்படக் கூடும் என்று வானியல் வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் பனிப்புயல் காரணமாக, வரலாற்றில் இல்லாத அளவு அங்கு பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என அமெரிக்காவின் தேசிய வானிலை சேவைகள் மையம் அறிவித்துள்ளது.

இதனால், அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 7 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்களை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என நியூயார்க் மேயர் கூறியுள்ளார். தொடர்ந்து இடை விடாமல் அப்பகுதியில் பனிப்பொழிவு காணப்படுவதால், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காணப்படுகின்றன.

இந்த பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரமே வெறிச்சோடிப் போய் காணப்படுகிறது. சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே வர அங்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் 300 டாலர் அபராதம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

2012ல் வந்த சாண்டி புயலுக்குப் பிறகு இப்போதுதான் நியூயார்க் நகரம் முமுமையாக வெறிச்சோடிப் போயுள்ளது. இதுவரை நியூயார்க் நகரத்துக்கு பனிப்புயலால் பேராபத்து ஏதும் ஏற்படவில்லை. எனினும், கனெக்டிக், லாங் ஐலண்ட், மாசசூசட்ஸ் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பனிப் பயுல் வீசி வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications