18 லட்சம் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா திட்டம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 18 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
அதிபர் டொனல்டு டிரம்பின் நெருங்கிய சகாவான வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்புக் குழுவின் தலைவர் ஸ்டீஃபன் மில்லர், "எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையின்போது, மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கான சுவர் ஒன்றை எழுப்ப 2500 கோடி அமெரிக்க டாலர் நிதியை வழங்க ஒப்புதல் அளித்தால், அடுத்த 10-12 ஆண்டுகளில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க ஆவண செய்ய்யப்படும் என்று தெரிவிக்கப்படும்" என்று குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
- டிரம்ப் தேர்ச்சி பெற்ற இந்த அறிவாற்றல் தேர்வில் உங்களால் தேற முடியுமா?
- அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர்
அதற்கான நிதி மசோதா வரும் திங்களன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. எனினும் மெக்சிகோ எல்லைச் சுவருக்கு அரசு நிதி வழங்குவதை எதிர்க்கப்போவதாக ஜனநாயகக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
'டிரீமர்ஸ்' என்று அழைக்கப்படும், தங்கள் குழந்தைப் பருவத்திலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி குடியேறியவர்கள் மற்றும் பிற 11 லட்சம் வெளிநாட்டவர்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுள்ளவர்கள் ஆவர்.
'டிரீமர்ஸ்' எனப்படுபவர்களை வெளியேற்றுவதைத் தள்ளிவைக்கும் 'டாகா' எனப்படும் டிஃபர்ட் ஏக்சன் ஃபார் சைல்டுஹூட் அரைவல்ஸ் (Deferred Action for Childhood Arrivals - DACA ) எனும் திட்டம் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமல்படுத்தப்பட்டது.
அதிபர் டிரம்ப் அடிக்கடி விமர்சனம் செய்யும், குடியேறியவர்களின் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, அவர்களது பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் குடியுரிமை வழங்கும் திட்டம் மற்றும் ஆண்டுதோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 50,000 பேருக்கு 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தரமாகத் தங்கி வேலை செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முடிவுக்காக கொண்டுவர வெள்ளி மாளிகை முன்மொழிந்துள்ளது.
'டாகா' குடியேறிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தியதை சட்டவிரோத குடியேற்றத்தை ஆதரிக்கும் செயல் என விமர்சித்த டிரம்ப், தற்போது அவர்களுக்கு குடியுரிமை வழங்க இத்திட்டத்தை முன்மொழிந்துள்ளதை, சட்டத்தை மீறுபவர்கள் மீது டிரம்ப் அரசு காட்டும் பரிவாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
பிற செய்திகள்
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- இந்தியாவின் முதல் குடியரசு தின கொண்டாட்டம் எப்படி இருந்தது?
- ஆதார் அட்டை இல்லாததால் 'ரேஷன்' மறுக்கப்பட்ட பெண் பட்டினிச்சாவு
- தமிழ்த்தாய் வாழ்த்து: கருணாநிதி நிற்காதது போல விடியோ பதிவிட்ட எச். ராஜா
-
ஈரான் - அமெரிக்கா போர்.. நீங்கள் சாப்பிடும் மீன் உணவுகளை பாதிக்க போகுது! எப்படி தெரியுமா? -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி -
இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்! கதிகலங்க வைக்கும் நேரடி அனுபவம் -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வந்தால்.. செல்போன் டவர் கூட எடுக்காது? உண்மை என்ன? அதிர்ச்சி பின்னணி -
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா! -
ஒரே வாரத்தில்.. 28% க்கும் மேல் வளர்ச்சி அடைந்த அதானி டோட்டல் கேஸ்.. சர்ரென உயர்வு! பின்னணி என்ன? -
சமையல் எரிவாயு விலை உயர்வு.. LPG உயர்விற்கு பின் உள்ள உண்மையான காரணம் என்ன? - முழு பின்னணி -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு














Click it and Unblock the Notifications