18 லட்சம் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா திட்டம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 18 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
அதிபர் டொனல்டு டிரம்பின் நெருங்கிய சகாவான வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்புக் குழுவின் தலைவர் ஸ்டீஃபன் மில்லர், "எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையின்போது, மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கான சுவர் ஒன்றை எழுப்ப 2500 கோடி அமெரிக்க டாலர் நிதியை வழங்க ஒப்புதல் அளித்தால், அடுத்த 10-12 ஆண்டுகளில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க ஆவண செய்ய்யப்படும் என்று தெரிவிக்கப்படும்" என்று குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
- டிரம்ப் தேர்ச்சி பெற்ற இந்த அறிவாற்றல் தேர்வில் உங்களால் தேற முடியுமா?
- அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர்
அதற்கான நிதி மசோதா வரும் திங்களன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. எனினும் மெக்சிகோ எல்லைச் சுவருக்கு அரசு நிதி வழங்குவதை எதிர்க்கப்போவதாக ஜனநாயகக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
'டிரீமர்ஸ்' என்று அழைக்கப்படும், தங்கள் குழந்தைப் பருவத்திலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி குடியேறியவர்கள் மற்றும் பிற 11 லட்சம் வெளிநாட்டவர்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுள்ளவர்கள் ஆவர்.
'டிரீமர்ஸ்' எனப்படுபவர்களை வெளியேற்றுவதைத் தள்ளிவைக்கும் 'டாகா' எனப்படும் டிஃபர்ட் ஏக்சன் ஃபார் சைல்டுஹூட் அரைவல்ஸ் (Deferred Action for Childhood Arrivals - DACA ) எனும் திட்டம் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமல்படுத்தப்பட்டது.
அதிபர் டிரம்ப் அடிக்கடி விமர்சனம் செய்யும், குடியேறியவர்களின் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, அவர்களது பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் குடியுரிமை வழங்கும் திட்டம் மற்றும் ஆண்டுதோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 50,000 பேருக்கு 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தரமாகத் தங்கி வேலை செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முடிவுக்காக கொண்டுவர வெள்ளி மாளிகை முன்மொழிந்துள்ளது.
'டாகா' குடியேறிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தியதை சட்டவிரோத குடியேற்றத்தை ஆதரிக்கும் செயல் என விமர்சித்த டிரம்ப், தற்போது அவர்களுக்கு குடியுரிமை வழங்க இத்திட்டத்தை முன்மொழிந்துள்ளதை, சட்டத்தை மீறுபவர்கள் மீது டிரம்ப் அரசு காட்டும் பரிவாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
பிற செய்திகள்
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- இந்தியாவின் முதல் குடியரசு தின கொண்டாட்டம் எப்படி இருந்தது?
- ஆதார் அட்டை இல்லாததால் 'ரேஷன்' மறுக்கப்பட்ட பெண் பட்டினிச்சாவு
- தமிழ்த்தாய் வாழ்த்து: கருணாநிதி நிற்காதது போல விடியோ பதிவிட்ட எச். ராஜா
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு














Click it and Unblock the Notifications