பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது: இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிப்பதற்காக நாடாளுமன்றம் கூடியுள்ளது. பிரதமர் இம்ரான் கான் பதவி தப்புமா என்பது இன்று தெரிந்துவிடும்.
இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் அசாத் குவைசர் நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அவரால் அவையின் வாக்கெடுப்பு நடத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், இன்று காலை பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் முகமது சர்வார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, அம்மாநிலத்தின் புதிய ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமிக்கப்பட்டுள்ளார்.
342 உறுப்பினர்களை கொண்டது பாகிஸ்தான் நாடாளுமன்றம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டுமானால், இம்ரான் கான் அரசுக்கு 172 வாக்குகள் தேவையாக உள்ளது.
https://www.youtube.com/watch?v=mbTrfHiBLbA
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













Click it and Unblock the Notifications