மாலியில் 2 பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையாளர்கள் கடத்தி சுட்டுக் கொலை
பமகோ: மாலியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பத்திரிக்கையாளர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாலியில் உள்ள ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனல் என்ற ரேடியோ நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிளாட் வெர்லன் மற்றும் கிஸ்லெய்ன் டூபான்ட். அவர்கள் மாலியில் உள்ள கிடால் நகரில் ஆயுதம் ஏந்திய நபர்களால் கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டனர். அவர்கள் கடத்தப்பட்ட சில மணிநேரத்தில் அவர்களின் உடல்கள் கிடாலுக்கு வெளியே 12 கிமீ தொலைவில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் உடல்கள் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது. முன்னதாக மெக்ரெப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அல் கொய்தா தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்க உதவிய 4 பிரெஞ்சுக்காரர்களை பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே கிளாடும், டூபான்ட்டும் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications