For Daily Alerts
Just In
மெக்சிகோவில் விமானம் மோதி இரு பெண்கள் சாவு.. எப்படி நடந்தது இந்த கொடுமை தெரியுமா?
மெக்சிக்கோவில் விமான ஓடுபாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதால் இருவரும் உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மெக்சிக்கோ: மெக்சிக்கோவில் செல்பி மோகத்தால் விமான ஓடுதளத்தில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள், விமானம் மோதியதால் உயிரிழந்துவிட்டனர்.
மெக்சிகோவின் ஷிவாவா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிட்ஷியா மெண்டோசா கோரல் (18) மற்றும் கிளாரிசா மார்குசோ மிராண்டா (17). நிஷியா சட்டம் படித்திருந்தார். அவரது தோழி கிளாரிசா பள்ளிப்படிப்பை முடித்திருந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் அங்குள்ள விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த விமானத்தின் பின்புறம் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை உரசுவது போன்று வந்த ஒரு வாகனத்தின் இறக்கை அந்த பெண்களின் கழுத்தில் பலமாக வெட்டியது. இதில் அந்த இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
English summary
Two teenage girls in Mexico died when a plane's wing struck their heads as they took a selfies on an airstrip.
Story first published: Thursday, March 30, 2017, 12:47 [IST]