மாலியில் குண்டு வைத்த 2 வாலிபர்களை அடித்துக் கொன்று, எரித்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

பமாகோ: மாலியில் குண்டு வைத்த 2 வாலிபர்களை மக்கள் கொன்று, எரித்துவிட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள மிகப்பெரிய நகரம் காவோ. அந்த நகரில் சனிக்கிழமை 2 வாலிபர்கள் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு தூரமாக சென்றுவிட்டனர். அவர்கள் தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் குண்டை வெடிக்க வைக்க நினைத்தனர். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத விஷயம் நடந்தது.

அதாவது காவோ மக்கள் குண்டு வைத்த இருவரும் ரிமோட்டை அழுத்துவதற்கு முன்பு அவர்களை பிடித்து அடித்துக் கொன்று எரித்துவிட்டனர். எரிக்கப்பட்ட அவர்களின் உடல்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இது குறித்து ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறுகையில்,

அந்த 2 வாலிபர்களை கொன்று, எரித்தே ஆக வேண்டும் என்று காவோவாசிகள் ஆத்திரத்துடன் இருந்தனர். அதனால் அவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றார்.

சனிக்கிழமை தான் தலைநகர் பமாகோவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மாலியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 5 பேரை முகமூடி அணிந்த நபர் இரவு நேர விடுதியில் வைத்து சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+