யோகா தினம் - தேம்ஸ் நதிக் கரையில் ஆயிரக்கணக்கானோர் கூடி யோகா செய்யத் திட்டம்
லண்டன்: சர்வதேச யோகா தினத்தையொட்டி ஜூன் 21ம் தேதி ஆயிரக்கணக்கானோர் கூடி லண்டனின் தேம்ஸ் நதிக் கரையில் யோகாசனம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
பிரமாண்டமான முறையில் இதை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முதலாவது சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படவுல்ளது. இதையொட்டி இங்கிலாந்திலும் பிரமாண்ட ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன.

பிரமாண்ட யோகா தினம்:
30க்கும் மேற்பட்ட இந்திய கலாச்சார நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளில் களம் இறங்கியுள்ளன. இந்த யோகா தினத்தை பிரமாண்டமானதாக மாற்ற அவை முடிவெடுத்துள்ளன.
தேம்ஸ் நதிக்கரையில்:
லண்டனில் தேம்ஸ் நதியின் தெற்குக் கரையில் உள்ள பெர்னி ஸ்பெயின் கார்டனில் யோகாசனம் நடைபெறவுள்ளது.
குத்து விளக்குடன் துவக்கம்:
குத்து விளக்கு ஏற்றி வைத்து விழா தொடங்குகிறதாம். மேலும் யோகா குறித்த உரையும் இடம் பெறுகிறது. சதீஷ் குமார் உரையாற்றவுிள்ளார்.
சுற்றுலாத்துறை நிகழ்ச்சி:
இந்தியத் தூதரகம், மத்திய அரசின் சுற்றுலாத்துறை ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.
சர்வதேச யோகா தினம்:
கடந்த ஆண்டுதான் ஐ.நா.சபை, ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதையடுத்து இந்த ஆண்டு முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாட்படவுள்ளது.












Click it and Unblock the Notifications