தீவிரமாகும் போர்..2 ஆயிரம் குழந்தைகள் கடத்தலா? பகீர் புகார் கிளப்பும் உக்ரைன்..ரஷ்யாவின் பதில் என்ன?
கீவ் : ரஷ்யா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகளை ரஷ்யா கடத்திச் சென்றுள்ளதாக உக்ரைன் பகீர் புகாரை கிளப்பியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவத்தினரின் மூர்க்கத்தனமான தாக்குதல் சுமார் 25 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், சுமார் 35 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
கீவ் நகரில் ஒரு வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், கீவ் நகரில் புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர்
வணிக வளாகம் ஏவுகனைகளை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டதால் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மற்றொரு நகரான மரியுபோலிலும் அதி தீவிரமாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நகரில் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய நேற்று வரை ரஷ்ய கெடு விதித்திருந்தது. இந்த நிலையில் ரஷ்யா விடுக்கும் இறுதி எச்சரிக்கைகளை ஏற்கமுடியாது என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

ஆளில்லா விமானங்கள்
உக்ரைன் மக்கள் சரணடைய மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுடன் எந்த போர் நிறுத்தம் செய்து கொள்வதாக இருந்தாலும் அது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டே முடிவெடுக்கப்படும் என்றும் செலன்ஸ்கி கூறியுள்ளார். இதற்கிடையே கருங்கடல் கரையோர துறைமுக நகரான ஒடேசாவின் புறநகர் பகுதிகளை ரஷ்ய படைகள் தாக்கியிருப்பதாக முதல்முறையாக அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார். இந்த பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் கடத்தல்
இந்நிலையில் தான், ரஷ்யா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகளை ரஷ்யா கடத்திச் சென்றுள்ளதாக உக்ரைன் பகீர் புகாரை கிளப்பியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியானது 2014 ஆம் ஆண்டு நடந்த ரஷ்ய-உக்ரேனியப் போருக்குப் பின்னர் குறிப்பிடத்தக்க ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளின் மையமாக உள்ளது. சமீபத்திய நாட்களில், நாட்டின் இரண்டு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் - சுதந்திரமான நாடுகளாக புடின் அங்கீகரித்த பின்னர் தான் விவகாரம் முற்றியது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மறுப்பு
தற்போது டான்பாஸ் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், செவ்வாயன்று ரஷ்யா தனது படையெடுப்பில் குழந்தைகளை குறிவைக்கிறது என்ற உக்ரைனின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. கடந்த வாரம், உக்ரைன், குழந்தைகள் உட்பட பலர் தஞ்சமடைந்திருந்த மரியுபோலில் உள்ள தியேட்டர் மீது ரஷ்யா குண்டுவீச்சு நடத்தியதாகக் கூறியது. செயற்கைக்கோள் படங்களில் சிவப்பு கூரையுடன் கூடிய மரியுபோல் நாடக அரங்கிற்கு வெளியே தரையில் வரையப்பட்ட பெரிய ரஷ்ய எழுத்தில் "குழந்தைகள்" என்ற வார்த்தையைக் காட்டியது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் வழக்கம் போல் இந்த குற்றச்சாட்டையும் ரஷ்யா மறுத்துள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications