உக்ரைனில் வன்முறை: வெளியேற்றப்படும் 300 தமிழர்கள் உள்பட 1000 இந்தியர்கள்
மாஸ்கோ: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் லுகன்ஸ்க் நகரில் இருந்து ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் லுகன்ஸ்க் நகரில் வசிக்கும் ஆயிரம் இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் 500 இந்தியர்கள் பெரும்பாலும் மாணவ, மாணவியர் உக்ரைனில் உள்ள லுகன்ஸ்க் நகரில் இருந்து கியிவ் நகருக்கு நேற்று கிளம்பினார்கள்.
லுகன்ஸ்கில் இருந்து வெளியேற்றப்படும் ஆயிரம் இந்தியர்களில் கேரளாவைச் சேர்ந்த 350 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 300 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 150 பேர், பஞ்சாபைச் சேர்ந்த 60 பேர், ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலா 25 பேர் அடக்கம். மீதமுள்ளவர்கள் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
கிழக்கு உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு இந்தியர்களை மத்திய அரசு கடந்த வாரம் வலியுறுத்தியது. மேலும் உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ரஷ்யா உக்ரைனுடன் இருந்த கிரிமீயாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதை எதிர்த்து ஒரு கும்பல் அரசுடன் மோதிக் கொண்டிருக்கிறது. கிரிமீயாவை விடுவிக்க கோரி கிழக்கு உக்ரைனில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
முன்னதாக லிபியாவில் போர் மூண்டபோது அங்கு வசித்த 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு தற்போது தான் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications