உள்நாட்டுப் போரால் ஈராக் பிளவுபடும் அபாயத்தில் உள்ளது : ஐ.நா. சபை எச்சரிக்கை
பாக்தாத்: ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் அந்நாடு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையேயான மோதல் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.
இதற்கிடையே ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அமெரிக்க நாட்டவரைப் பாதுகாக்க 275 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. அத்துடன் பெர்சிய வளைகுடா பகுதிக்கு போர்க்கப்பலையும் அனுப்பியுள்ளது அமெரிக்கா.
இந்நிலையில், இதே நிலை தொடர்ந்து நீடித்தால் ஈராக் பிளவு படும் அபாய நிலை உருவாகும் என ஐ.நா.சபை எச்சரித்துள்ளது. ஈராக்கில் உள்ள அரசியல் மற்றும் மத தலைவர்கள் கலவரத்தை தூண்டும் செயலை கைவிட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய சூழலில் இந்த உள்நாட்டுப் போரினால் ஈராக் மூன்றாக பிரிவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஈராக்கிடமிருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்திஷ் மாகாணம் இந்த உள்நாட்டுப் போரை பயன்படுத்தி தனிநாடு பிரகடனத்தை வெளியிட அல்லது விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக குர்திஷ் மாகாண பிரதமர் கூறுகையில், ‘இனி நாடு பழைய நிலைக்கு திரும்புவது முடியாத காரியம். எங்களுக்குரிய குர்திஷ் மாகாணம் முழுமையாக எங்களுக்கே கிடைக்க அரேபிய நாடுகளின் சன்னி பிரிவினர் உதவ வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஈராக் பிளவு படும் நிலைக்குத் தள்ளப்பட்டால் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வாழும் பகுதி, சன்னி பிரிவு முஸ்லிம்கள் வாழும் பகுதி மற்றும் குர்து இன மக்கள் வாழும் பகுதி என மூன்றாக பிளவு படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications