இலங்கை மீதான விசாரணையில் கவலைதரும் தகவல்கள்- புதனன்று அறிக்கை வெளியீடு: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர்
ஜெனிவா: இலங்கை மீதான மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையில் கவலை தரும் தகவல்கள் கிடைத்துள்ளன; இந்த அறிக்கை நாளை மறுநாள் புதன்கிழமையன்று வெளியிடப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அல்ஹூசைன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது கூட்டம் இன்று ஜெனிவாவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய அல் ஹூசைன் இலங்கை தொடர்பாக கூறியதாவது:

6 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி காலத்தில் (2006-2009) மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளை எதிர்கொண்டோம். அந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒரு நகர்வாக, பொறுப்புக்கூறல் அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆழமான செயல்பாட்டில் இறங்கியது.
2014 மார்ச்சில் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயலகம் மேற்கொண்ட விரிவான விசாரணை அறிக்கை மற்றும் பரிந்துரைகள் வரும் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. இந்த விசாரணையின் முடிவுகளில் கவலை தரும் தகவல்கள் இடம்பெறும்.
இந்த விவகாரத்தில் கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அக்கறையையும், அவரது தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகளையும் வரவேற்கிறேன்.
இவ்வாறு அல்ஹூசைன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications