தேவைக்கதிகமாக 2 லட்சம் ஹெக்டரில் ‘ஓபியம்’ உற்பத்தி: ஆப்கன் விவசாயிகள் குறித்து ஐ.நா. கவலை
காபூல்: கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 35 சதவீதம் அதிகமாக ஓபியம் விவசாயத்தில் ஆப்கானிஸ்தான் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
1990களில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட தொடர் யுத்தங்களின் விளைவாக, ஆப்கன் அரசுக்கு உதவி புரியும் விதமாக கடந்த 2001ஆம் ஆண்டு அந்நாட்டில் ஐ.நா.வின் நேட்டோ படைகள் நிலை நிறுத்தப்பட்டன.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அந்நாட்டில் ஓபியம் உற்பத்தியை ஒழிக்க மேற்கத்திய நாடுகள் செய்த முயற்சிகளின் விளைவாக அங்கிருந்த இரண்டு மாகாணங்களில் இந்தப் பயிர்களின் உற்பத்தி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, அங்கு தேவையை விட அதிக அளவில் போதைப் பொருள் விவசாயம் செய்யப் பட்டிருப்பதாக ஐ.நா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் குழப்பம்...
வரும் 2014ஆம் ஆண்டின் இறுதியில் நேட்டோ படைகள் ஆப்கனிலிருந்து முற்றிலுமாக விலகிக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இதனால், ஏற்கனவே தலிபான்களின் தாக்குதல்களால் ஆடிப் போயிருக்கும் நாட்டின் பாதுகாப்பும், பொருளாதாரமும் மேலும் சிக்கலாகலாம் எனச் சொல்லப் படுகிறது.

ஓபியம் பயிர்....
எனவே, அங்குள்ள விவசாயிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்த வருடம் அதிக அளவில் போதைமருந்து பயிர்ப் பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர் என்று ஐ.நாவின் வருடாந்திர அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

தேவைக்கு அதிகமாக...
கிட்டத்தட்ட 2,00,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள இந்த மூலப்பொருள் முற்றிலுமாக அறுவடை செய்யப்பட்டால் உலகத் தேவைகளை விடவும் அதிகமாக இருக்கக்கூடுமாம்.

ஐ.நா கவலை....
இந்த உற்பத்தி சென்ற வருடத்தைவிட 36 சதவிகிதம் அதிகப்படியானது என கவலைத் தெரிவித்துள்ளது ஐ.நாவின் போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் மீதான அலுவலகத்தின் ஆய்வறிக்கை.

பாதுகாப்பின்மை...
இது குறித்து ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களாவது, ‘தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டில் காணப்படும் பாதுகாப்பின்மையே விவசாயிகளின் இந்த முடிவுக்குக் காரணமாகும்' என்றனர்.

தாலிபன் பகுதி...
போதைப் பொருள் விவசாயத்தில் பாதிக்கும் மேற்பட்ட சாகுபடி ஆப்கனின் தென்பகுதியான தாலிபன்களின் ஆதிக்கம் மிகுந்த ஹெல்மான்ட் பகுதியிலேயே காணப்படுவதாக ஆப்கன் நாட்டின் போதைத்தடுப்பு அமைச்சரான தின் முகமது முபாரக் ரஷிதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications