Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமானம் பாதை மாறி சென்றதாக தகவல்...

Subscribe to Oneindia Tamil

மார்ச் 9: தாய்லாந்தின் வளைகுடா பகுதியில் சில பொருட்கள் கிடப்பதை வியட்நாம் குழுவினர் கண்டுபிடித்தனர். ஆனால், எம்ஹெச்370 உடன் தொடர்பில்லாத பொருட்கள் அவை என தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க போயிங் ரக விமான பிரதிநிதிகள் மலேசியாவிற்கு உதவிக்கு சென்றனர். விமானம் பாதை மாறி சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 10:

தெற்கு சீன கடல் வரை தேடுதல் பணியை மலேசிய அரசு விரிவுபடுத்தியது. ஹாங்காங் அருகே விமானத்தின் சிதைவடைந்த பொருட்கள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து கப்பல்களையும் அனுப்பியது.

Updates in the search for missing Malaysia Airlines flight MH370 crashed

மார்ச் 11:

வியட்நாம் கடற்கரை பகுதியில் விமான சிதைவு பொருட்கள் கிடக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் கிழக்கு நோக்கி விரிவுபடுத்தப்பட்டது.

திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்தவர்களால் தீவிரவாத செயல் நடக்கவில்லை என்று மலேசியா மற்றும் இண்டர்போல் அதிகாரிகள் கூறினர்.

மார்ச் 12:

கடத்தல் நடந்திருக்கும் என்பதன் அடிப்படையில் குற்ற விசாரணை நடைபெறுவதாக மலேசியா கூறியது.

ஆனால், கடைசி சிக்னலுக்கு அடுத்து விமானம் மேற்கு நோக்கிய திரும்பியது என்றும், மலேசிய அரசு தேடுதல் பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் வியட்நாம் கூறியது.

மார்ச் 13:

ரேடார் கருவி தொடர்பு துண்டிக்கப்பட்டு விமானம் பாதை மாறி சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் இடிபாடுகள் குறித்து தேடுதல் பணி மாறியது.

தென் சீன கடல் மற்றும் தாய்லாந்து வளைகுடா இடையே மிதக்கும் பொருட்கள் இருப்பதாக சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டின. அவை விமான பாகங்கள் இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்தது.

மார்ச் 14:

மலேசிய அரசு விமானிகள் மீது சந்தேக பார்வையை செலுத்தியது. அதேவேளையில், தேடுதல் பணியை பார்வையிடுவதற்காக பிரதமர் நஜீப் ரசாக் தனது கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கான பயணத்தை தள்ளி போட்டார்.

மார்ச் 15:

ஆஸ்திரேலிய பகுதியை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் சென்றதாக செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றங்கள் வழியே கண்டறியப்பட்டது.

விமானிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன. விமானம் உள்நோக்கத்துடன் திசை திருப்பப்பட்டு உள்ளது என்று புதிய தகவல் தெரிவிப்பதாக பிரதமர் நஜீப் தெரிவித்தார்.

மார்ச் 16:

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பும் கிட்டத்தட்ட 7 மணிநேரம் விமானம் இயங்கியுள்ளதாக செயற்கைக்கோள் சிக்னல்கள் தெரிவித்தன.இதனால், தேடுதல் வேட்டை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மாற்றப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+