ஆமா.. சுமையாவை நாங்கள் தான் கொன்றோம்.. 2 வயது பிஞ்சுக்கு நடந்த பயங்கரம்.. மன்னிப்பு கேட்ட அமெரிக்கா
காபூல் ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் தற்போது பொறுப்பேற்றுள்ளது
காபூல்: சுமையாவை நாங்கள்தான் கொன்றோம் என்றும், ட்ரோன் தாக்குதலில் நடந்த படுகொலைக்கும் தாங்களே பொறுப்பேற்பதாகவும், அமெரிக்க ராணுவம் தற்போது மன்னிப்பு கோரி உள்ளது.
தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபூல் ஏர்போர்ட்டை கைப்பற்றினார்கள்.. அப்போதிருந்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது..
தாலிபன்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக உயிரை கையில் பிடித்து கொண்டு மக்கள் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.. கடந்த கால ஆட்சியில் நடந்த கொடூரம் இன்னொரு முறை நடந்துவிடக்கூடாது என்ற அச்சமே அவர்களிடம் தலைதூக்கி உள்ளது.

முற்றுகை
அதனால்தான், காபூல் ஏர்போர்ட்டை ஆகஸ்ட் 15-ம்தி முதலே முற்றுகையிட்டு, தஞ்சமடைய தொடங்கினர்.. ஒருகட்டத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் ஏர்போர்ட்டுக்குள் புகுந்ததால், அவர்களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார்கள்.. இந்த தாக்குதல் அமெரிக்க ராணுவத்தையும் குறி வைத்தே நடத்தப்பட்டது என்று அப்போதே பேசப்பட்டது..

கண்காணிப்பு
இறுதியில் இந்த தாக்குதலில் 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 72 பேர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பிறகு, தாலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்களை கவனித்து வந்த அமெரிக்க ராணுவம், காபூல் ஏர்போர்ட் அருகே நின்ற ஒரு கொரோல்லா கார் மீது தன்னுடைய கவனத்தை குவித்தது.. அந்த காரை கிட்டத்தட்ட 8 மணிநேரம் கண்காணித்தனர்..

சிதறி வெடித்தது
அந்த காரின் பின்பக்கத்தில் இருந்து ஏதோ ஒன்றை கீழே இறக்கி வைப்பது போல உணர்ந்தனர்.. ஒருவேளை அது ஆயுதங்கள் தான் என்பதையும் தவறுதலாக புரிந்து கொண்டுவிட்டது. உடனே, அமெரிக்க ராணுவம் அந்த காரின்மீது ட்ரோன் ஆயுதங்களை பயன்படுத்தியது.. கார் வெடித்து சிதறி கொளுந்து விட்டு எரிந்தது.. இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்...
Recommended Video

ஆயுத தாக்குதல்
சதித்திட்டம் தீட்டியவர்களை அழித்துவிட்டோம் என்று அமெரிக்கா மார்தட்டியது.. உண்மையில் அந்த காரில் ஆயுதங்கள் எதுவுமே இல்லை.. பொதுமக்கள்தான் உயிருக்கு பயந்துகொண்டு அந்த காரில் இருந்துள்ளனர்.. அவர்கள் கீழே இறக்கி வைத்தது தண்ணீர் கேன்களைதான்.. ஆனால், தேவையில்லாமல் அவர்களை சந்தேகப்பட்டு, அவசரப்பட்டு, ஆயுத தாக்குதல் நடத்திவிட்டது...

சுமையா
உயிரிழந்த அந்த 10 பேரில் ஒரு குழந்தைதான் சுமையா.. 2 வயது பிஞ்சு குழந்தை.. உயிரிழந்தவர்கள் சுமையாவின் குடும்பத்தினர்... அமெரிக்கர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து வந்த நாசர் என்பவரும் இந்த வெடிகுண்டில் சிதறிப்போனார். இந்த படுகொலைக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று இப்போது அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.. அத்துடன் தங்கள் தவறுக்கும் மன்னிப்பு கோரியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications