Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானிடம் இருக்கும் செக் பாயிண்ட்.. ஹார்மூஸ் மூடும் டிரம்பின் முடிவுக்கு சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஹார்மூஸ் ஜலந்தியை மூடினால் ஹவுதி கிளர்ச்சியாளர்களை வைத்து செங்கடலில் உள்ள அல் பாப் மண்டேப் ஜலசந்தியை மூடும் அபாயம் இருப்பதால், அதிபர் டிரம்பின் இந்த முற்றுகை நடவடிக்கைக்கு சவுதி அரேபியா தனது கவலையை அமெரிக்காவிடம் பதிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக டிரம்ப் அறிவித்தார்.

ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுவோம் என்றும் அந்த வழியாக எந்த கப்பல்களும் வரவோ, போகவோ அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

Saudi Arabia

சவுதி அரேபியா கவலை

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனாவும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் துறைமுகங்கள் அனைத்தையும் அமெரிக்க போர் கப்பல்கள் முற்றுகையிட தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சவுதி அரேபியா தனது கவலையை தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கும் முயற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும். இதற்கு பதிலாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகத்திடம் சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது. ஈரானின் துறைமுகங்களை மூட அமெரிக்கா முயன்றால், ஈரான் பிற முக்கியமான கப்பல் ரூட்களையும் குறிவைத்து இடையூறு செய்யும் என்று தனது அச்சத்தை சவுதி அரேபியா டிரம்பிடம் கூறியுள்ளதாம்..

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி

அதாவது, ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், அமெரிக்கா ஈரான் ஏற்றுமதியை முடக்க முயற்சித்தால், அந்த நாடு பாப் அல் மண்டேட் ஜலசந்தியை முடக்கி பதிலடி கொடுக்கும். செங்கடலில் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த பாப் அல் மண்டேட் ஜலசந்தி வழியாகவே சவுதி அரேபியா தனது மீதமுள்ள ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்கா அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு சவுதி அரேபியா தங்களுக்கு கவலையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா போரால் ஹார்முஸ் ஜலந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக முன் அனுமதி பெற்ற நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்போம் என்று ஈரான் கூறியது. அதேபோல, அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

செங்கடல் வழித்தடமும் பாதிக்கப்பட்டால்

ஈரானின் இந்த நடவடிக்கையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் தொடரும் பதற்றத்தால், அந்த நாட்டின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளன. செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய தொடங்கிய சவுதி அரேபியா மீண்டும் தனது ஏற்றுமதியை அதிகரித்து வரும் நிலையில், செங்கடல் வழித்தடமும் பாதிக்கப்பட்டால் தனது ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு அடையும் என்று சவுதி அரேபியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

பாப் அல் மண்டேப் ஜலசந்தி ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரானுக்கு நெருக்கமான அமைப்பாக இந்த ஹவுதி கிளர்ச்சி குழு உள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் - காசா போரின் போது இந்த வழித்தடத்தில் போக்குவரத்திற்கு ஹவுதி கிளர்ச்சிக்குழு கடும் இடையூறு ஏற்படுத்தியது. தற்போது ஈரானின் அழுத்தம் காரணமாக மீண்டும் இந்த வழித்தடத்தை மூடினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+