காசா போர் நிறுத்தம்! வீட்டோவை பயன்படுத்திய அமெரிக்கா.. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ரத்து
வாஷிங்டன்: காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே உடனடியாக நிபந்தனையின்றி நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை அமெரிக்கா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்திருக்கிறது.
பிணைக் கைதிகளை விடுவிப்பதை பற்றி இந்த தீர்மானம் எதையும் பேசவில்லை என்று கூறியுள்ள அமெரிக்கா, தீர்மானம் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாகவும் சொல்லி ரத்து செய்துள்ளது.

அமெரிக்கா தீர்மானத்தை ரத்து செய்திருந்தாலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற 14 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
போர் காரணமாக காசாவில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. சுமார் 20 லட்சம் மக்கள் பஞ்சத்தாலும், கடும் பனியிலும் உயிருக்கு போராடி வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனுப்பி வைத்த மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்காததால் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவின் தூதர் டொரோதி ஷியா கூறுகையில், “இந்த தீர்மானம் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகளை குறைத்து மதிப்பிடுகிறது. நாங்கள் ஏற்கெனவே போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை முன் வைத்திருக்கிறோம். ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது," என்று கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இதுகுறித்து கூறுகையில், "காசா தொடர்பான ஐ.நா தீர்மானம், ஹமாஸ் பயங்கரவாதிகளின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தியுள்ளது. ஹமாஸை கண்டித்து, அவர்கள் காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஐ.நா தீர்மானம் போட்டிருக்க வேண்டும்," என கூறியுள்ளார்.
1. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை கண்டிப்பது
2. ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசாவிலிருந்து வெளியேறுவது
இது இரண்டையும் அமெரிக்காவும், இஸ்ரேலும் விரும்புகின்றன. ஆனால் ஐநா தீர்மானத்தில் இது குறிப்பிடப்படாமல் இருந்தது, அமெரிக்காவை டென்ஷனாக்கியது.
இதற்கு முன்னர் ஹாமஸ்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் அது இரண்டு மாத காலத்திற்கு மட்டுமே நீடித்தது. இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியதால் போர் நிறுத்த ஒப்பந்தம் பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது. திரும்பவும் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததின்படி, நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 45 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவம் சண்டையின்போது தங்கள் வீரர்கள் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
-
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications