குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா!

Subscribe to Oneindia Tamil

மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த மறைமுகப் போர், தற்போது நேரடியாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் நாட்டின் எல்லைக்குள் புகுந்து அமெரிக்க ராணுவம் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு ஈரான் இன்று குவைத்-ல் முக்கிய பகுதியை தாக்கியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே மிக முக்கியமான அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், இந்தத் திடீர் ராணுவ தாக்குதல் சர்வதேசச் சந்தையிலும், கச்சா எண்ணெய் சந்தையிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

America Iran USA war US military airstrikes Iran 2026 Iran targets US airbase Kuwait Strait of Hormuz ship attacks IRGC retaliatory strikes Bandar Abbas US F A-18 fighter jets deployment Middle East conflict crude oil impact US Iran peace negotiations updates drone control station attack Kuwait military base explosion news global shipping route escalation today

அமெரிக்காவின் அதிரடி ட்ரோன் வேட்டை

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச வணிகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ட்ரோன் விமானங்களை ஏவி வந்தது. இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில் களமிறங்கிய அமெரிக்கப் படைகள், ஈரானின் ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தின.

மேலும், அமெரிக்காவின் எஃப்/ஏ-18 (F/A-18) போர் விமானங்கள் ஈரானின் எல்லைக்குள் ஊடுருவி, தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கியத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த ட்ரோன் கட்டுப்பாட்டு மையத்தை (Drone-Control Station) குண்டுகள் வீசி முற்றிலுமாக அழித்துள்ளன.

இந்தத் தரைக்கட்டுப்பாட்டு மையம் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிலடி கொடுத்த ஈரான்

அமெரிக்கா தனது எல்லைக்குள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் உடனடியாக ராணுவ ரீதியாகப் பதிலடி கொடுத்துள்ளது. தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) துறைமுக நகருக்கு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ விமானத்தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கப் போர் விமானங்கள் தங்களின் மீது தாக்குதல் நடத்த இந்தக் குவைத் விமானத்தளமே ஆரம்பப் புள்ளியாக (Origin of the Aggression) இருந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானின் இறுதி எச்சரிக்கை

குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் உலக நாடுகளுக்குத் தனது கடுமையான எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா மீண்டும் தங்களுக்கு எதிராக இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டால், தங்களின் அடுத்தகட்டப் பதிலடி இதைவிட மிகக் கொடூரமானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என ஈரானின் புரட்சிகரக் காவல் படை எச்சரித்துள்ளது.

இருதரப்பிலும் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதல்கள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் மத்திய கிழக்கின் அமைதிச் சூழலுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளதோடு, சாமான்ய மக்களின் பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என அஞ்சப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

இந்த தாக்குதல் மூலம் சர்வதேச கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 3.76 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 92.01 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.67 சதவீதம் உயர்ந்து 97.75 டாலராக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+