குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா!
மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த மறைமுகப் போர், தற்போது நேரடியாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் நாட்டின் எல்லைக்குள் புகுந்து அமெரிக்க ராணுவம் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு ஈரான் இன்று குவைத்-ல் முக்கிய பகுதியை தாக்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே மிக முக்கியமான அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், இந்தத் திடீர் ராணுவ தாக்குதல் சர்வதேசச் சந்தையிலும், கச்சா எண்ணெய் சந்தையிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிரடி ட்ரோன் வேட்டை
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச வணிகக் கப்பல்கள் மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ட்ரோன் விமானங்களை ஏவி வந்தது. இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில் களமிறங்கிய அமெரிக்கப் படைகள், ஈரானின் ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தின.
மேலும், அமெரிக்காவின் எஃப்/ஏ-18 (F/A-18) போர் விமானங்கள் ஈரானின் எல்லைக்குள் ஊடுருவி, தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கியத் துறைமுக நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த ட்ரோன் கட்டுப்பாட்டு மையத்தை (Drone-Control Station) குண்டுகள் வீசி முற்றிலுமாக அழித்துள்ளன.
இந்தத் தரைக்கட்டுப்பாட்டு மையம் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதிலடி கொடுத்த ஈரான்
அமெரிக்கா தனது எல்லைக்குள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் உடனடியாக ராணுவ ரீதியாகப் பதிலடி கொடுத்துள்ளது. தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) துறைமுக நகருக்கு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ விமானத்தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கப் போர் விமானங்கள் தங்களின் மீது தாக்குதல் நடத்த இந்தக் குவைத் விமானத்தளமே ஆரம்பப் புள்ளியாக (Origin of the Aggression) இருந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் இறுதி எச்சரிக்கை
குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் உலக நாடுகளுக்குத் தனது கடுமையான எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா மீண்டும் தங்களுக்கு எதிராக இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டால், தங்களின் அடுத்தகட்டப் பதிலடி இதைவிட மிகக் கொடூரமானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என ஈரானின் புரட்சிகரக் காவல் படை எச்சரித்துள்ளது.
இருதரப்பிலும் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதல்கள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் மத்திய கிழக்கின் அமைதிச் சூழலுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளதோடு, சாமான்ய மக்களின் பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என அஞ்சப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்த தாக்குதல் மூலம் சர்வதேச கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலை 3.76 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 92.01 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3.67 சதவீதம் உயர்ந்து 97.75 டாலராக உள்ளது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!















Click it and Unblock the Notifications