பெற்ற தாயை கொடூரமாகக் கொன்று நெஞ்சைக் கிழித்து இதயத்தை கையால் எடுத்த கொடூரன்!
கலிபோர்னியா: அமெரிக்காவில் 31 வயதான நபர் தனது தாயை மிகக் கொடூரமாகக் கொன்று இதயத்தை வெறும் கைகளாலேயே வெளியே எடுத்த வெறிச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கழித்துத்தான் போலீஸாருக்குத் தகவல் தெரிய வந்தது. தற்போது இவரை கைது செய்துள்ளனர் போலீஸார்.
தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பின்னர் இவ்வாறு மோசமாக நடந்துள்ளார் இந்த நபர்.

கலிபோர்னியாவின் பிரிமான்ட் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான ஓமர் பெட்டிஜென். இவரது தாயார் நைலா பெட்டிஜென். 64 வயதான இவர் முன்னாள் கணித ஆசிரியை ஆவார்.
நைலாவின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார். நியூ மெக்சிகோவில் அவர் வசித்து வருகிறார். தனது ஒரே மகனுடன் வசித்து வந்தார் நைலா.
சம்பவத்தன்று நைலாவுக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மகன் முரட்டுத்தனமாக நடக்கவே துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார் நைலா. இதனால் கோபமடைந்த ஒமர், துப்பாக்கியை ஒரு சுத்தியலால் தட்டி கீழே தள்ளினார். பின்னர் தனது தாயாரைத் தாக்கினார். பிறகு இன்னொரு துப்பாக்கியை எடுத்து தாயாரை பெற்ற தாய் என்றும் பார்க்காமல் நான்கு முறை சுட்டார். இதில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் நைலா.
அதன் பின்னர் கத்தியை எடுத்து தனது தாயாரின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் மார்புப் பகுதி வரை உடலைக் கிழித்த அந்த நபர் இதயத்தை கையால் எடுத்து வெளியில் எடுத்து போட்டுள்ளார்.
தனது மகனிடமிருந்து போன் எதுவும் வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை போலீஸாருக்குப் போன் போட்டு என்ன ஆனது என்று பார்க்கக் கூறியுள்ளார். போலீஸார் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் நடந்த கொடூரம் தெரிய வந்து அதிர்ந்தனர். இதையடுத்து ஒமர் கைது செய்யப்பட்டார்.
நைலா மொத்தம் 7 முறை சுடப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். அவரது உடலை அறுத்து கொடூரமாக நடந்துள்ளார் ஒமர்.
கைது செய்யப்பட்ட ஒமர் போலீஸாரிடம் கூறுகையில் எனது தாயார் முழங்கால் மற்றும் இடுப்பு பிரச்சினை தொடர்பாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டனர். அதன் பின்னர் அவர் பெயின் கில்லர்களுக்கு அடிமையாகி விட்டார். இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்து விட்டது. இதுதொடர்பாக அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
தனது தாயாரைக் கொலை செய்த பின்னர் வெளியில் போன ஒமர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார் என்றும் தெரிய வந்தது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications