ட்ரம்ப் அரசின் மனிதாபிமானம் இல்லாத உத்தரவை படித்ததும், குமுறி அழுத பெண் செய்திவாசிப்பாளர்
Recommended Video

வாஷிங்டன்: அகதிகளின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து தனிமையில் அடைத்து வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவு குறித்த செய்தியை வாசித்தபோது, அந்த நாட்டு பெண் செய்தி வாசிப்பாளர் தேம்பி அழுத சம்பவம் உலகமெங்கும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக வந்த அகதிகளின் குடும்பத்தில் இருந்து குழந்தைகளை மட்டும் பிரித்து தனி காப்பகத்தில் வைக்கிறது ட்ரம்ப் அரசு. சமீபத்தில் ட்ரம்ப் இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்தார். இந்த காப்பகங்கள், 'tender age' shelters என்று அழைக்கப்படுகின்றன.
இந்த உத்தரவால் குழந்தைகள், பெற்றோரை பிரிந்து இருக்க வேண்டியுள்ளது. பெற்றோரோ சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்த அவலத்தை உலக நாடுகள் பலவும் கண்டுகொள்ளவில்லை.

மனிதத்தன்மை இல்லை
இருப்பினும் மெக்சிகோ அரசு இதை கடுமையாக கண்டித்துள்ளது. மெக்சிகோ அரசு மனிதாபிமானமற்ற செயல் என்று இதை கண்டித்துள்ளது. சிறு குழந்தைகள் முதல் இளம் பிராயத்திலுள்ள பிள்ளைகள் என பல தரப்பட்ட குழந்தைகள், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் செயல் மனிதநேயம் உள்ளிட்டவர்களிடம் கவலையை ஏற்படுத்தியது.

அழுத செய்தி வாசிப்பாளர்
இதனிடையே, இதுகுறித்த செய்தியை MSNBC என்ற டிவி சேனல் செய்தி வாசிப்பாளர் ரேச்சல் மேட்டோ என்ற பெண்மணி வாசித்தார். அப்போது அவரால் செய்தியை தொடர முடியாமல் உடைந்துவிட்டார். திரும்ப திரும்ப அவர் வாசிக்க முயன்றும் அவரால் முடியவில்லை. அழுகை பீறிட்டது. கண்ணீர் வடிந்தது. வாயை மூடியபடியே 3 முறை அவர் செய்தியை வாசிக்க முயன்றார். ஆனால் முடியாமல் போகவே, சக ஆண் செய்தி வாசிப்பாளர் அதை வாசிப்பார் என கூறி கிளம்பி சென்றுவிட்டார்.
|
வைரல் வீடியோ
இந்தசம்பவம் உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அந்த வீடியோ வைரலாகிவிட்டது. இதையடுத்து, ட்விட்டரில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ரேச்சல். எவ்வளவோ முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதிபர் உத்தரவு
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள புதிய செயல்திட்ட உத்தரவின்படி குழந்தைகளைப் பிரிப்பதைக் கைவிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மெக்சிகோ எல்லை வழியே அத்துமீறி வந்த அகதிகளின் குடும்பத்தைப் பிரிக்கப்போவதில்லை என்றும் அவர்களின் குடும்பம் ஒன்றாக இருக்கவே விரும்புகிறோம் என்பதால், அத்துமீறி நுழைந்த அகதிகள் கைது செய்யப்பட்டு தங்கள் குழந்தைகளுடனே சிறையில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
ஈரானுக்கு அபார சக்தி இருக்கு.. இப்படி பதிலடி கொடுப்பாங்கனு நினைக்கல.. மிரண்டுப்போய் டிரம்ப் சொன்ன வார்த்தை -
உலக போரை இழுத்துவிடும் டிரம்ப்? ஐரோப்பிய நாடுகளுக்கு தந்த வார்னிங்.. 'நேட்டோ' பற்றி சர்ச்சை கருத்து -
சீனா பக்கம் சாயும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பதற்கு புது கண்டிஷன்! டிரம்புக்கு பெரிய தலைவலி -
ஹார்முஸ் ஜலசந்தி இனி ஈரானுக்கு சொந்தமில்லை? கைப்பற்றப்போகும் டிரம்ப்? விரைந்த கொடூர ராட்சசன் -
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்.. சீனாவுக்கு சிக்னல் கொடுத்த டிரம்ப்.. பதற்றத்தில் ஈரான் -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?












Click it and Unblock the Notifications