For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடினமான நாட்கள் வர போகிறது.. அமெரிக்க அதிபர் தேர்தல்.. எச்சரிக்கை விடுக்கும் ஈரான்.. பின்னணி!

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்.. கடினமான நாட்கள் இனிமேல்தான் வர போகிறது என்று ஈரான் அதிபர் ஹாசன் ரவுஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடித்து வருகிறது. வெற்றிக்கு மிக அருகில் வந்துவிட்டாலும் கூட..6 எலக்ட்ரல் வாக்குகளை வெல்ல முடியாமல் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் திணறி வருகிறார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் டிரம்பிற்கும் வெற்றி வாய்ப்பு இல்லை.

தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். தோல்வியை எதிர்நோக்கி இருப்பதால் உடனே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை விடுத்து வருகிறார்.

என்ன

என்ன

இந்த நிலையில் அமெரிக்காவில் நடக்கும் இந்த அரசியல் குழப்பத்தை ஈரான் அதிபர் கடுமையான கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக ஈரான் அதிபர் ஹாசன் ரவுஹானி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் எதுவும் மாறாது. எங்கள் நாடு அமெரிக்காவை எதிர்கொள்ள திட்டங்களை வகுத்து வருகிறது.

யார் வந்தாலும்

யார் வந்தாலும்

அமெரிக்காவின் அதிபராக யார் வந்தாலும், அமெரிக்காவை ஒரே மாதிரிதான் நாங்கள் எதிர்கொள்வோம். கடினமான நாட்கள் அமெரிக்காவிற்கு இனிதான் வரப்போகிறது. அமெரிக்காவின் அதிபராக யார் வந்தாலும் அவர்களை ஒரே மாதிரிதான் நாங்கள் நடத்துவோம். புதிய அதிபர் சர்வதேச விதிகளையும், சட்டங்களையும் மதிக்க வேண்டும்.

ஈரான் மதிப்பு

ஈரான் மதிப்பு

ஈரான் நாட்டை அமெரிக்க அதிபர் மதிக்க வேண்டும். எங்கள் மீதான தடையை நீக்க வேண்டும். யார் அதிபராக வென்றாலும் எனக்கு மீதான தடையை நீக்க வேண்டும். அதேபோல் சர்வதேச விதிகளை மதித்து செயல்பட வேண்டும். ஆனால் அமெரிக்காவின் வரலாற்றை பார்த்தவர்களுக்கு தெரியும் .. அவர்கள் எப்போதும் மாற மாட்டார்கள் என்று தெரியும்.

எங்களுக்கு தெரியும்

எங்களுக்கு தெரியும்

சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எங்கள் மீதும் தடைகளை நீக்க வேண்டும். அப்படி தடைகளை நீக்கினால் மட்டுமே.. நாங்கள் அணு ஆயுத ஒப்பந்த பேச்சுக்களை நடத்துவோம், என்று ஈரான் அதிபர் ஹாசன் ரவுஹானி தெரிவித்துள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அமெரிக்க அதிபர் டிரம்ப்.. 2018ல் ஈரான் உடன் செய்திருந்த சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அதோடு ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தார். இதைத்தான் தற்போது ஈரான் அதிபர் ஹாசன் ரவுஹானி சுட்டிக்காட்டி பேசியுள்ளார். எங்கள் மீதான தடைகளை நீக்கவில்லை என்றால் கடினமான நாட்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளார்.

பிடன் கொள்கை

பிடன் கொள்கை

ஈரான் விவகாரத்தில் பிடன் தனது கொள்கையை ஏற்கனேவே தெரிவித்துவிட்டார். அதிபராக தேர்வு செய்யப்பட்டால்.. ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்குவேன். ஈரான் உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொள்வேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் ஈரான் அதிபர் ஹாசன் ரவுஹானி இரண்டு அதிபர் வேட்பாளர்களையும் சீண்டும் விதத்தில் பேசி உள்ளார்.

English summary
US Presidential Election 2020: Tough time ahead says Iranian President before the result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X