குடியரசு தின விழா தலைமை விருந்தினர்: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் அமெரிக்கா அதிபர் ஒபாமா!
வாஷிங்டன்/டெல்லி: நாட்டின் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அமெரிக்கா அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டுள்ளது.
டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வாஷிங்டனில் வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் ஜோஸ் எர்னெஸ்ட் வெளியிட்ட அறிக்கை, இந்திய குடியரசு தின விழா விழாவில் முதல் முறையாக அமெரிக்கா அதிபர் கலந்து கொள்வதை கவுரவமாக அமெரிக்கா அதிபர் ஒபாமா கருதுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளாறிக்கை, அமெரிக்கா பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, குடியரசு தின நிகழ்வில் அமெரிக்கா அதிபர் ஒபாமா கலந்து கொள்ள தூதரக உறவுகள் மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். இதனடிப்படையில் முறைப்படியான எழுத்துப்பூர்வமான அழைப்பு அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் இந்தியாவுக்கு வருகை தர ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் முதலாவது அமெரிக்க அதிபர் என்பதுடன் இந்தியாவுக்கு 2 முறை பயணம் மேற்கொண்ட முதலாவது அமெரிக்க அதிபரும் ஒபாமாதான் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications