இந்தியாவில் திருடப்பட்ட சென்னை கோவில் சிலை 200 கலைப்பொருட்கள் மோடியிடம் ஒப்படைப்பு
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்காலத்து சிலைகள் உள்ளிட்ட கலைப்பொருட்களை அமெரிக்கா பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்காலத்து சிலைகள் உள்ளிட்ட 200 கலைப்பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.
அவற்றின் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தியாவில் உள்ள பல வழிபாட்டுத் தளங்களில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் தான் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
A focus on heritage & culture...I thank the US government for the return of precious cultural artefacts to India. pic.twitter.com/9mxjtEU527
— Narendra Modi (@narendramodi) June 7, 2016
மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களில் சென்னையில் உள்ள சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்ட சோழர் காலத்து மாணிக்கவாசகர் சிலையும் அடக்கம். மேலும் 1000 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கலத்தால் ஆன விநாயகர் சிலையும் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலைகளை பெற்றுக் கொண்ட மோடி கூறுகையில்,
இந்த பழமை வாய்ந்த பொருட்களின் மதிப்பு தான் சிலருக்கு தெரியும். ஆனால் இது பணத்தையும் தாண்டிய விஷயம். இது எங்கள் கலாச்சாரம், பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றார்.
இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கலாச்சாரம், பாரம்பரியம்...விலைமதிப்பில்லா இந்த கலாச்சார பெருமை வாய்ந்த பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications