ஆர்எஸ்எஸ்சை தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்க கோரும் வழக்கு: அமெரிக்க அரசு எதிர்ப்பு!
நியூயார்க்: 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத இயக்கம்' என, அறிவிக்க வலியுறுத்தி, அமெரிக்காவின் நியூயார்க் கோர்ட்டில், அங்குள்ள சீக்கிய அமைப்பு சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை, தள்ளுபடி செய்ய வேண்டும் என, அமெரிக்க நிர்வாகம், நியூயார்க் கோர்ட்டை கேட்டுக் கொண்டுள்ளது.

'இந்தியாவை, 'இந்து ராஷ்டிரம்' எனப்படும், இந்துக்கள் வாழும் நாடாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, பல தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது' என, 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற சீக்கியர் அமைப்பு, நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ஒரு வாதியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகம் வலியுறுத்த உள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார.












Click it and Unblock the Notifications