எபோலா நோய்க்கு அமெரிக்கா தயாரித்த ‘ஷ்மாப்’ மருந்து... லைபீரியாவுக்கும் தர சம்மதம்
வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய்க்கு அமெரிக்கா குணமாக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த மருந்தை லைபீரியாவுக்கும் தர அமெரிக்கா சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்க்கொல்லி நோயான எபோலாவுக்கு உலகளவில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தென்னாப்பிரிக்க நாடுகளில் இந்த நோய்ப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அவசரநிலையை பிரகடனப் படுத்தியுள்ளது.

மருந்து...
இந்நிலையில் அமெரிக்காவின் மாப்பயோ பாமாசூடிகல்ஸ் நிறுவனம் இந்த நோயை குணப்படுத்தும் மருந்து ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும், அதற்கு ‘ஷ்மாப்' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குணமடைந்து வருகின்றனர்...
சமீபத்தில் நோய்த் தொற்றோடு அமெரிக்கா திரும்பிய இரண்டு சமூகநல ஆர்வலர்கள் இந்த மருந்து மூலம் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

லைபீரியா...
இந்நிலையில், ‘எபோலா' வைரஸ் நோயால் பாதிப்படைந்த நாடுகளில் ஒன்றான லைபீரியா, இந்த மருந்தை தங்களுக்கு வழங்கும்படி அமெரிக்காவிடம் கேட்டுள்ளது.

சம்மதம்...
பரிசோதனைக்குரிய அந்த மருந்தை அடுத்த வாரம் லைபீரியாவுக்கு அனுப்பப் அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிபரின் எல்லன் ஜான்சன் சர்லீப்பின் இணையதளப்பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நைஜீரியா...
அதேசமயம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா இந்த மருந்தை அமெரிக்காவிடம் கேட்டதாகவும், ஆனால் அமெரிக்கா தர மறுத்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

விவாதம்...
முன்னதாக ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனம் நடத்திய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications