கலிபோர்னியா காட்டுத் தீ... இதுவரை 24 பேர் பலி... 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
ஒரிகான்: கட்டுக்கடங்காமல் தொடர்ந்து காட்டுத் தீ பரவுவதால் ஒரிகான் பகுதியில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுப் பகுதியில் ஆகஸ்ட் முதல் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த தீ விபத்துகளில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 100 இடங்களில் காட்டுத் தீ பரவி இருக்கிறது. கலிபோர்னியா, ஒரிகான், வாஷிங்டன் பகுதிகள் மிக மோசமாக காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. போர்ட்லாந்தின் தெற்கு பகுதியில் மொலாலா நகரில் இருந்து மட்டும் 9,000 பேர் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஒரிகான் ஆளுநர் கடே ப்ரவுன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 40,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 5 லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை உள்ளது என்றார். தற்போது காற்றின் வேகம் குறைந்து மழைக்கான வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக காட்டுத் தீ கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
இத்தீவிபத்தில் சிக்கியவர்கள் கூறுகையில், மெக்சிகோவில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் 4 குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினோம். இப்போது எல்லாமும் போய்விட்டது. உயிருடன் நாங்கள் இருக்கிறோம்.. இதுமட்டும்தான் மிச்சமாக உள்ளது என்றனர். ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் இந்த தீ விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்திருக்கிறது. கலிபோர்னியாவில் மட்டும் 3,9000 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications