கட்டிப்பிடிக்க மறுத்த காதலன்.. கத்தியால் குத்திய காதலி... இது அமெரிக்காவில்!
வாஷிங்டன்: தன்னைக் கட்டித் தழுவ காதலன் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த 31 வயதுப் பெண், கத்தியை எடுத்து காதலனைக் குத்தி விட்டார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஷவோன்னா ரும்ப். இவரும் இவரது காதலரும், மானடீ என்ற இடத்தில் வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது உற்சாகத்தி்ல இருந்த ஷவோன்னா, காதலரை படுக்கை அறைக்குக் கூட்டிச் சென்றார்.
படுக்கையில் காதலரை அமர வைத்த அவர், தன்னை கட்டித் தழுவி வருடிக் கொடுக்குமாறு கேட்டாராம். ஆனால் அதற்கு உடன்பட மறுத்துள்ளார் காதலர். மேலும் ஷவோன்னாவை விட்டு விலகவும் முயற்சித்தார்.
இதனால் கோபமடைந்த ஷவோன்னா, காதலரின் சட்டையைப் பிடித்து இழுத்தார். இதில் சட்டை கிழிந்தது. இதனால் கோபமடைந்த காதலர் வீட்டை விட்டு வெளியேற முயற்சித்தார். இதனால் மேலும் கோபமாகிப் போன ஷவோன்னா, சமையலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து காதலரைக் குத்தி விட்டார்.
இதுகுறித்துப் போலீஸுக்குத் தகவல் போகவே போலீஸார் ஷவோன்னாவைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications