கல்யாணம் மறந்து போச்சு….கணவரையே திருப்பி கட்டிகிட்டாச்சு…!
ப்ளோரிடா: அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது திருமணத்தையே மறந்துவிட்டதால், கைப்பிடித்த கணவனையே மீண்டும் திருமணம் செய்துள்ளார்.
அமண்டா கார்த் என்னும் அந்த 27வயதான பெண்மணி ப்ளோரிடாவைச் சேர்ந்தவர்.இவருக்கும்,கோடி கார்த் என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால்,திருமணநாளின் இரவில் அமண்டா கடுமையான இதய கோளாறான"இதயச்சிதைவு" நோயால் திடீரென்று பாதிக்கப்பட்டார்.
இந்நிகழ்வை பற்றி நினைவு கூறும் கோடி,தான் உடனே விழித்து அமண்டாவை பார்த்த போது அவர் மூச்சு விட முடியாமல் தவித்ததாக கூறினார்.உடனே கோடி அவருக்கு மூச்சுதிணறலுக்கான முதலுதவியை அளித்துள்ளார்.
இதய இயக்க மீட்பு எனப்படும் அம்முதலுதவி பாதிக்கப்பட்டவருக்கு உடனடி ஆக்ஸிஜனை வழங்கி அவரை சுவாச மீட்பு செய்ய உதவும் முறையாகும்.
அதன் பின்,அமண்டா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கிட்டதட்ட நான்கு நாட்கள் உயிருக்கு போரடிய அவர் உயிர் பிழைத்தாலும் தனது திருமணத்தை பற்றிய நினைவுகளை முழுமையாக இழந்துவிட்டார்.
இதனை அறிந்த பத்திரிக்கை ஒன்று,இத்தம்பதியினரின் குடும்பத்தார்,நண்பர்கள் மற்றும் அமண்டாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் முன்னிலையில் அமண்டா-கோடிக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications