3 ஆண்டுகளாக காத்திருந்து காத்திருந்து... தற்போது கேமராவில் பிடிக்கப்பட்ட அரிய வகை வெள்ளைநிற கடமான்
சுவீடன் நாட்டில் மிகவும் அரிய வகை இனமான வெள்ளை கடமான் ஒன்று அங்குள்ள ஏரியில் தண்ணீர் குடிக்கும் காட்சிகள் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை இனமான வெள்ளை சுடமான் ஒன்று ஏரியில் தண்ணீர் குடிக்கும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
பணத்துக்காகவும், இறைச்சிக்காகவும் விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சில விலங்குகள் பரவலாக இருந்த நிலையில் தற்போது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே உள்ளன.
அந்த வகையில் அரிய மான் வகையான வெள்ளை கடமான் ஒருவரது கேமராவில் பிடிப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டில் உள்ள ஒரு ஏரியில் தண்ணீர் குடிக்கும் போது கேமராவில் பிடிப்பட்டது.

3 ஆண்டுகள் காத்திருப்பு
வெள்ளை கடமான் பொதுவாக சுவீடனில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் மிகவும் அரிதாகவே கண்களில் தென்படும். இந்நிலையில் கடமானை எப்படியாயினும் கண்டே தீர வேண்டும் என்று அன்ஸ் நீல்சன் என்பவர் 3 ஆண்டுகளாக காத்திருந்தார்.

தினமும் பார்வை
அந்த ஏரியில் அந்த கடமான் தண்ணீர் குடிக்கும் என்பதை அறிந்த அன்ஸ் தினந்தோறும் அந்த ஏரிக்கு சென்று வருவார். இதேபோல் 3 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒருநாள் ஏரியில் அந்த மான் தண்ணீர் குடித்து கொண்டிருந்தது.

படம்பிடித்தார்
உடனே கையில் இருந்த கேமராவுடன் காத்திருந்தார். பின்னர் ஏரியின் மறுமுனைக்கு சென்ற அந்த மான் அங்கிருந்த இலை தழைகளை திண்றது. அதன்பின்னர் திரும்பி பார்த்து இவரது கேமராவுக்கு அந்த மான் போஸ் கொடுத்தது.

சமூக வலைதளங்கள்
வெள்ளை கடமானை வீடியோ எடுத்த பதிவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அதை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். இந்த மானின் வெள்ளை நிறம் அதன் மரபணு மாற்றத்தால் வந்ததே தவிர, அதன் நிறம் வெளுத்ததால் அல்ல என்று தகவல்கள் கூறுகின்றன.
|
100 மான்கள் மட்டுமே
இந்த வெள்ளை கடமானாது சுவீடனில் வெறும் 100 எண்ணிக்கையே உள்ளன. இதன் நிறத்தால் எளிதாக வேட்டைக்காரர்களிடம் சிக்கி மடிந்து விடுகின்றன. இந்த மான் வேட்டையர்களுக்கு தென்பட்டால் அன்று அவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது என்றே அர்த்தமாம்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications