வியட்நாமில் மீண்டும் தொற்று.. ரஷ்யாவின் தடுப்பூசியை வாங்க முடிவு
ஹனோய்: வியட்நாமின் சுகாதார அமைச்சகம் ரஷ்யாவின் கொரோனா ( COVID-19) தடுப்பூசி வாங்க பதிவு செய்துள்ளது, அந்நாட்டின் தொலைக்காட்சி இன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான வியாட்நாம் சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸின் உள்ளூர் கொத்துப்பரவலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அதை சமாளிக்க ரஷ்யாவின் உதவியை நாட முடிவு செய்துள்ளது.
Recommended Video
உலகின் முதல் COVID-19 தடுப்பூசியின் முதல் பேட்ஜ் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று ரஷ்யா கடந்த புதன்கிழமை கூறியது. ஆனால் ரஷ்யா உடனே கொரோனா தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் அளித்தால் அதன் பாதுகாப்பு குறித்து சில வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் பாதுகாப்பு குறித்த கவலைகள் அனைத்தும் "ஆதாரமற்றவை" என்று ரஷ்யா நிராகரித்துள்ளது..
இதற்கிடையில், வியட்நாம் நாடும் சொந்தமாக COVID-19 தடுப்பூசியை தொடர்ந்து உருவாக்கி வருவதாக வியட்நாமின் சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது. எனினும் தற்போதைய நாட்டில் உள்ளூர் தொற்று பரவல் சூழல் காரணமாக ரஷ்யாவின் கொரோனா ( COVID-19) தடுப்பூசி வாங்க முடிவு செய்துள்ளது வியட்நாம்.

புதிதாக பரவல்
அதிகப்படியான சோதனை, தொடர்பு-தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் முன்பு கொரோனா தொற்று பரவிய போது வெற்றிகரமாக வியட்நாம் முறியடித்து உலக நாடுகளிடம் பாராட்டை பெற்றது. ஆனால் ஆனால் இப்போது பிரபலமான சுற்றுலா நகரமான டனாங்கின் பல இடங்களில் தொற்றுநோய் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த வியட்நாம் போராடி வருகிறது. வியட்நாமில் கடந்த ஜூலை 25 அன்று புதிதாக தொற்று பரவ தொடங்கியது.

மிக அதிக ஆபத்து
வியட்நாமில் மொத்தம் 911 நோய்த்தொற்றுகள் இதுவரை பதிவாகியுள்ளன, இதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது மீண்டும் கொரோனா பரவி வருவதால் வைரஸ் பரவலாக பரவுவதற்கான ஆபத்து "மிக அதிகம்" என்று பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக் எச்சரித்துள்ளார், மேலும் அடுத்த பல நாட்கள் தொற்றின் பரவலை எதிர்த்துப் போராடுவதுதுதான் நாட்டில் "முக்கியமானதாக" இருக்கும் என்றும் கூறினார்.

பாதுகாப்பாக வாழ வேண்டும்
வியட்நாமின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் தலைவர் வு டக் அணை வெள்ளிக்கிழமை, வியட்நாமுக்கு "வைரஸுடன் பாதுகாப்பாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார். "நாம் ஒரு ஏழை நாடு. வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை முடிந்தவரை செயல்படுத்தி வருகிறோம், எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வைரஸிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்றும் அணை கூறினார்.

எத்தனை டோஸ்
ரஷ்ய தடுப்பூசியை வாங்க முடிவு செய்துள்ள வியட்நாம் எத்தனை டோஸ் பெறுவது என்பது குறித்து ஆர்டகள் வெளியிடப்படவில்லை. மேலும் அவற்றைப் பெறுவது எப்போது என்பது குறித்தும் கருத்து கூறவில்லை. வியட்நாமிலேயே தயாரிக்கப்படும் தடுப்பூசி 2021 இறுதிக்குள் கிடைக்கும் என்று அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
-
தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications