"சைலெண்ட் மோட் ஓவர்.." திடீரென ரஷ்யா திரும்பிய வாக்னர் படை தலைவர்.. படைகள் எல்லாம் எங்கே! பரபரப்பு
மாஸ்கோ: ரஷ்யா அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட முயன்ற அந்நாட்டின் தனியார் ராணுவமான வாக்னர் பிரிவு தலைவர் ப்ரிகோஜின் மீண்டும் ரஷ்யா திரும்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உக்ரைன் நாட்டுடன் தொடங்கிய போர் ஓராண்டைக் கடந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சில வாரங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போர் 1.5 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த மாதம் அங்குள்ள தனியார் ராணுவமான வாக்னர் தலைவர் ப்ரிகோஜின் திடீரென அந்நாட்டில் கிளர்ச்சி நடத்தினார். இதனால் அங்கே பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டது. இருப்பினும் இது சில நாட்கள் மட்டுமே நீட்டித்தது.

உள்நாட்டுப் போர் சூழல்: திடீரென அவர்கள் போர்க்கொடி தூக்கியதால், ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் பெலராஸ் அதிபர் நேரடியாகத் தலையிட்டார். வாக்னர் தலைவர் ப்ரிகோஜின் இதற்காக பெலராஸ் நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், எவ்ஜெனி ப்ரிகோஜின் தனது கிளர்ச்சியைக் கைவிட்டார்.
ஆனால், அதன் பின்னரும் ப்ரிகோஜின் தொடர்ந்து பெலராஸ் நாட்டிலேயே இருந்து வந்தார். அவர் ஏன் ரஷ்யாவுக்குத் திரும்பாமல் பெலராஸ் நாட்டிலேயே இருக்கிறார் எனத் தெரியாமல் இருந்தது. இந்தச் சூழலில், ரஷ்யாவின் கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் இப்போது ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு திரும்பியுள்ளார். அதேபோல கலகத்திற்கு முன்பு அவரது ராணுவத்தினர் எங்கே இருந்தனரோ, அதே இடங்களுக்கு இப்போது திரும்பியுள்ளனர்.

ரஷ்யா திரும்பினார்: முன்னதாக நடந்த பேச்சுவார்த்தையில் தனக்கும் தனது வீரர்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம், தனது படைகளை பெலாரஸ் நாட்டிற்கு அழைத்து வர அனுமதி ஆகியவற்றை பெற்ற பிறகே ப்ரிகோஜின் தனது கலகத்தை முடித்துக் கொண்டார். கடந்த ஒரு வாரமாக பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிலேயே இருந்தார். இந்தச் சூழலில் தான் இப்போது பிரிகோஜின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் திரும்பியுள்ளார்.
அதேபோல வாக்னர் படை வீரர்களும் போருக்கு முன்பு எந்த முகாம்களில் இருந்தார்களோ அதே இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். அதேநேரம் எந்த இடத்தில் உள்ளனர் என்பது தொடர்பாகத் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
என்ன நடந்தது: இதே வாக்னர் படை தான் கிளர்ச்சிக்கு முன் உக்ரைனில் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்டனர். இருப்பினும் திடீரென ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜெனரல் ஸ்டாஃப் தலைவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய வாக்னர் குழு, கலகம் செய்தனர். அப்போது அவர்கள் தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டோவை வெகு விரைவாகக் கைப்பற்றினர்..
மேலும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி பேரணியாகவும் சென்றனர். அந்த நேரத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் புதினுக்கு எதிராக இந்தளவுக்கு வெளிப்படையாக அச்சுறுத்தலாக இருந்தவர் இவர் தான். இது புதின் தனது சொந்த நாடான ரஷ்யாவிலேயே எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறார் என்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்போது அங்கே கலகம் முடிவுக்கு வந்தாலும் கூட, மீண்டும் ரஷ்யாவில் பழையபடி சூழல் திரும்புவது கடினம் என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இது புதினுக்கு அங்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications