பெலாரஸ் அதிபர் தலையீட்டால் நடந்த ட்விஸ்ட்.. ரஷ்யாவை விட்டு வெளியேறும் வாக்னர் குழு தலைவர்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் இடைக்கால உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஓராண்டு கடந்த் நீடித்துக் கொண்டு இருக்கிறது. சிறிய நாடான உக்ரைனை ஒரு கை பார்த்துவிடலாம் என்ற மமதையில் சென்ற ரஷ்யாவுக்கு நினைத்தது ஒன்று நடப்பது வேறு ஒன்று ஆகிவிட்டது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் ஆதரவுடன் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வலுவாக சண்டையிட்டது. இதனால், ரஷ்யாவின் எண்ணம் தற்போது வரை ஈடேறவில்லை. இதற்கு மத்தியில் ரஷ்யா, உக்ரைனுக்கு எதிரான போரில் வாக்னர் என்ற தனியார் குழுவையும் போரில் பயன்படுத்தி வந்தது. இந்த குழுவை பொறுத்தவரை இது கூலிப்படை போல பணத்தை பெற்றுக்கொண்டு தாக்குதல் நடத்தும் ஒரு அமைப்பு ஆகும்.
உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்துக்கு உதவியாக தாக்குதல் நடத்தி வந்த இந்த குழு ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது. உக்ரைன் போரில் ரஷியா தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், தங்களது அமைப்பை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேரை ரஷிய ராணுவம் கொன்றுள்ளதாகவும் வாக்னர் குழு குற்றம்சாட்டி கலகத்தை தொடங்கியது. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்குவை வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் கடுமையாக விமர்சித்து வந்தார்.
தொடர்ந்து ரஷ்யாவின் ராணுவ தலைமையை மாற்றுவோம் என்ற அரைகூவலுடன் மாஸ்கோ நோக்கி செல்லவும் திட்டமிட்டது. எனினும்ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினுடன் இடைக்கால உடன்படிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்ட வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் வெளியிட்ட ஒரு ஆடியோ செய்தியில், இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் தங்கள் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள் என்று கூறினார். பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளின்படி, வாக்னர் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கு எதிரான ரஷ்ய பாதுகாப்புத்துறை பதிவு செய்த கிரிமினல் வழக்குகள் அனைத்தும், அந்நாட்டு அதிபர் புதினின் உத்தரவின் பேரில் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வாக்னர் படையினர் உடனான ஒப்பந்தப்படி ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, இராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் உட்பட பாதுகாப்பு அமைச்சகத்தில் பலரை மாற்ற முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக வாக்னர் குழு தலைவர் பெலாரஸ் செல்வார் என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications