போர் குற்ற வழக்கு எதிரொலி: பிரேசிலுக்கான இலங்கை தூதர் ஜெகத் ஜெயசூர்யா தப்பி ஓட்டம்
போர் குற்ற வழக்கு தொடரப்பட்ட நிலையில் பிரேசிலுக்கான இலங்கை தூதர் ஜெகத் ஜெயசூர்யா அந்நாட்டைவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
பிரேசிலியா: போர் குற்ற வழக்கு தொடரப்பட்ட நிலையில் பிரேசிலுக்கான இலங்கை தூதர் ஜெகத் ஜெயசூர்யா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வன்னியில் 2007 முதல் 2009-ம் ஆண்டு வரை ராணுவ தளபதியாக இருந்தவர் ஜெகத் ஜெயசூர்யா. அப்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மருத்துவமனைகள், குழந்தைகள் இல்லங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

பிரேசிலுக்கான தூதர்
2009-ல் இறுதி யுத்தம் முடிந்த பின்னர் ஜெகத் ஜெயசூர்யாவுக்கு பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான தூதர் பதவி பரிசாக அளிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பிரேசிலுக்கான தூதராக பணியாற்றி வந்தார் ஜெகத் சூர்யா.

போர்க் குற்ற வழக்கு
இந்த நிலையில் 14 சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் சர்வதேச சட்ட வல்லுநர் கார்லோஸ் காஸ்ரேசனா பிரேசிலில் போர்க் குற்ற வழக்கை தாக்கல் செய்தார். சிலி முன்னாள் சர்வாதிகாரி பினோசெட், அர்ஜெண்டினா ராணுவ தளபதி ஜார்ஜ் ரபேல் விடெலா ஆகியோருக்கு எதிராக போர்க் குற்ற வழக்குகளை தொடர்ந்தவர் கார்லோஸ் காஸ்ரேசனா.

தப்பி ஓடி தலைமறைவு
தற்போது வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஜெகத் ஜெயசூர்யா பிரேசிலைவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் இலங்கையில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை விளக்கம்
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இலங்கை அரசு, ஜெகத் ஜெயசூர்யா பதவி காலம் முடிவடைந்த நிலையில் பிரேசிலில் இருந்து புறப்பட்டுவிட்டார்; போர்க் குற்ற வழக்கு என்பது எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications