அமெரிக்காவில் இந்தியர் கொலை: ஹெச்-1பி விசாவை மனதில் வைத்து அடக்கி வாசிக்கும் மோடி அரசு?
நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய என்ஜினியர் கொல்லப்பட்ட விஷயத்தில் இந்தியா அடக்கி வாசிக்கி காரணம் உள்ளதாம்.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஹைதராபாத்தை சேர்ந்த இந்திய என்ஜினியர் சீனிவாச குச்சிபோத்லா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இந்தியா தரப்பில் இருந்து கண்டன நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
உலகையே அதிர்ச்சி அடைய வைத்த இந்த விஷயத்தில் இந்தியா அடக்கி வாசிக்கிறது.

டிரம்ப்
அமெரிக்க அதிரபர் டிரம்பின் வெறுப்பு பேச்சுகளால் தான் கன்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று பல நடப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். கன்சாஸ் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்குமாறு வெள்ளை மாளிகைக்கு நெருக்கடி ஏற்பட்டது.

கண்டனம்
அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக பேசிய டிரம்ப் சீனிவாச குச்சிபோத்லாவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்தார். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தியா
வெளிநாடுகளில் இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டால் இந்தியா வழக்கமாக கடும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும். ஆனால் சீனிவாச குச்சிபோத்லா விஷயத்தில் மட்டும் அடக்கி வாசிக்கிறது.

விசா
இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் வேலைகளை அமெரிக்காவுக்கு திரும்பக் கொண்டு வருவேன் என்று டிரம்ப் அறிவித்தார். மேலும் ஹெச்-1 பி விசா விஷயத்திலும் கை வைத்தார். ஹெச்-1பி விசாக்களில் 60 சதவீதம் இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. இந்நிலையில் டிரம்பின் அறிவிப்பால் 150 பில்லியன் டாலர் துறை பிரச்சனையில் சிக்கியுள்ளது.

மத்திய அரசு
ஹெச்-1பி விசா விஷயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கரை மத்திய அரசு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் என்ஜினியர் கொலை விஷயத்தில் சீறினால் அமெரிக்கா விசா விவகாரத்தில் வேலையை காட்டிவிடும் என்று மத்திய அரசு நினைக்கிறது.

நடவடிக்கை
சீனிவாச குச்சிபோத்லா விவகாரத்தில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளது. நமக்கு தேவை குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பது தானே என்று கூறி இந்தியா தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டுள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications