பின் லேடன் எங்கள் ஹீரோ, மோடிக்கு உளவியல் பிரச்சனை உள்ளது: முஷாரப்
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதத்தை பரப்ப முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளித்ததாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி தொலைக்காட்சி சேனலான துனியா டிவிக்கு அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது,
காஷ்மீரில் தாக்குதல் நடத்த லஷ்கர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது. ஆப்கானிஸ்தானின் சோவியத்துகளை எதிர்கொள்ள நாம் தாலிபான், அய்மான் அல் ஜவாஹிரி மற்றும் ஜலாலுத்தீன் ஹக்கானி ஆகியோருக்கு பயிற்சி அளித்தோம்.

காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்ப முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளித்தோம். அவர்கள் அடக்கி வைக்கப்படுவதை எதிர்த்து நாம் போராட வேண்டும். லஷ்கர் இ தொய்பாவுக்கு பாகிஸ்தான் நிதி அளித்தது.

சயீத்
ஹபீஸ் சயீத் நம் ஹீரோ. மேலும் ஜிஹாதில் பங்கேற்க எல்லையைத் தாண்டி இந்த பாக்கம் வந்த காஷ்மீரிகளும் நம் ஹீரோக்கள். ஹக்கானி, ஒசாமா பின் லேடன் ஆகியோரும் நம் ஹீரோக்கள்.

மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உளவியல் பிரச்சனை உள்ளது. அவர் தனக்கு 10 வயது இருக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக கேள்விப்பட்டேன். அப்படி என்றால் சிறுவயதில் இருந்தே அவர் மனதில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் நன்கு பதிந்திருக்கும்.

ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் இந்துக்களின் ஆதிக்கத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். அது முஸ்லீம்கள் மீது ஆதிக்கத்தை காட்ட முயற்சி செய்கிறது. சிறுபான்மையினரை ஆள்வதை நம்புகிறவர் மோடி என்றார் முஷாரப்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications