குட்டி தூக்கத்தால் அதிக பயன்கள் - வல்லுநர்கள் வழங்கும் ஆச்சரிய தகவல்கள்
நீண்ட வேலை நேரம் - அதில் சில பணிகளை நாம் விரும்பி செய்கிறோம் சிலவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், எது எப்படியோ நமது பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டுதான் செல்கிறது. எனவே நாள் முழுவதும் நமது ஆற்றலை தக்க வைத்து கொள்வது சிரமம்தான்.
கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்?
இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் இரவு தூக்கத்திலிருந்து விழித்து கொள்ளும் நேரம் முதல் நமது மூளையில் 'அடினோசின்' எனும் ரசாயனம் அதிகரித்து கொண்டே செல்லும்.
எனவே நீங்கள் அதிக நேரம் விழித்து கொண்டிருக்கும்போது உங்கள் மூளையில் அடினோசின் அதிகமாகும். அது தூக்க உணர்வை அதிகரிக்கும்.
"ஆனால் நாம் சிறிது நேரத்திற்கு தூங்கும்போது இந்த அடினோசின் குறைகிறது. எனவே நமது ஆற்றல் அதிகரித்து நாம் விழிப்புடன் இருப்போம்," என்கிறார் லண்டனில் உள்ள 'தி ஸ்லீப்' பள்ளியின் துணை நிறுவனர் கை மீடோவ்ஸ்.
இந்த குட்டித்தூக்கம் என்பது 10-20 நிமிடங்களுக்குட்பட்டதாக இருக்கும்.
ஆனால் இதுவே நாம் நமது நினைவாற்றல், புதுமையான சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், ஆராயும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த குறைந்தது 90 நிமிடங்களாக தூங்க வேண்டும் என்கிறார் 'டேக் எ நேப்; சேங்ஜ் யுவர் லைஃப்' புத்தகத்தின் எழுத்தாளர் சாரா மெட்நிக்.
"இம்மாதிரியாக 60-90 நிமிடங்கள் தூங்கும்போது இரவில் தூங்குவது போன்ற நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன." என்கிறார் சாரா. இவர் தூக்கம் குறித்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
குட்டித்தூக்கத்திற்கான பயிற்சிகள் என்ன?
குட்டித்தூக்கத்திற்கு மீண்டும் வருவோம். இந்த குட்டித்தூக்கம் என்பது நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது போன்றோ அல்லது பைக் ஓட்டுவது போன்றோதான் என்கிறார் மீடோவ்ஸ்.
ஏனென்றால் இதற்கும் பயிற்சி தேவை ஆனால் குறுகிய காலத்தில் இதனை கற்றுக் கொள்ளலாம்.
"குட்டித்தூக்கம் மட்டுமே போதும் என்றால் பத்து நிமிடத்திற்கு நீங்கள் அலாரம் வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் தூங்கினால் உங்கள் உடலும் அதற்கு பழகிக் கொள்ளும்" என்கிறார்.
மூன்று மாதங்களில் இதில் நீங்கள் கை தேர்ந்தவர் ஆகிவிடலாம்.
முக்கியமான விஷயம் உங்களை நீங்களே தூங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. மெத்தையிலோ அல்லது நாற்காலியிலோ அல்லது ஏதேனும் ஒரு வசதியான இடத்திலோ அமர்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ உறங்கலாம். அறை இருட்டாக இருக்க வேண்டும். உங்களின் கண்களை ஏதேனும் மாஸ்கை கொண்டு மூடிக்கொள்ளலாம். அந்த தருணத்தை பயன்படுத்தி ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.
அதேபோன்று குட்டித்தூக்கத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு அலைப்பேசி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். மூச்சை இழுத்து விடுங்கள். தண்ணீர் குடிக்கலாம். சுருக்கமாக சொல்லப்போனால் 'வசதியாக ஓய்வெடுங்கள்'.
உங்களை மறந்து தூங்குவீர்கள்
சிலர் தங்களுக்கு எளிதில் தூக்கம் வராது என்பதால் ஒரு நாளின் இடையில் 15 நிமிடங்களுக்கு மட்டும் தூங்குவது என்பது இயலாத காரியம் என்கின்றனர். ஆனால் நாம் நம்மை அறியாமலேயே தூங்கி விடுகிறோம் என்கிறார் மிடோவ்ஸ்.
"பலரை தூங்கச் செய்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அவர்கள் தூக்கத்தின் முதல் கட்டத்தில் இருக்கும்போது அவர்களை எழுப்பி அவர்கள் விழித்து கொண்டிருந்தனரா அல்லது தூங்கிக் கொண்டிருந்தனரா என்று கேட்டபோது 65 சதவிதம் பேர் அவர்கள் விழித்துக் கொண்டிருந்ததாகதான் தெரிவித்தனர்."
"எனவே இம்மாதிரியான தூக்கத்தில் நாம் தூங்குகிறோம் என்பதை பலர் அறியவில்லை" என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல தூங்குவதால் மட்டும் நமக்கு பலன் அல்ல. 10-20 நிமிடங்கள் நமது கண்ணை மூடிக் கொண்டிருப்பதாலும் நமக்கு நன்மையே.
இது இரவில் தூங்கியவர்கள் தூங்காதவர்கள் என இருவருக்குமே நன்மை தரும்.
மாற்று வழிகள்
பல வலைத்தளங்களில் குட்டித்தூக்கத்திற்கு முன்பு காஃபி குடிப்பது பயன் தரும் என்கின்றனர். ஏனென்றால் குடித்த 20 நிமிடங்களுக்கு பிறகுதான் கெஃபைனின் தாக்கம் உடலில் தெரிய தொடங்கும்.
ஆனால் இது நல்ல யோசனை அல்ல என்கிறார் சார மெட்நிக்.
"இந்த குட்டித்தூக்கம் என்பதே ஆற்றல் பெறுவதற்குதான். ஆனால் மதிய வேளையில் காஃபி என்பது தவறான யோசனை" என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மெட்நிக் மற்றும் அவரின் சக பணியாளர்கள் 2008ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் 200மிகி கெஃபைனின் தாக்கத்துடன் 60-90 நிமிட தூக்கத்தின் தாக்கத்தை ஒப்பிட்டனர்.
அதில் தூக்கம் மட்டுமே பலன் தந்தது என்றும் காஃபியால் எதிர்மறை தாக்கங்களே ஏற்பட்டன என்றும் கண்டறியப்பட்டது.
குட்டித்தூக்கம் போட இயலாதவர்களுக்கு சிந்தனை திறன் மேம்படும் பயன் கிடைக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் குட்டித்தூக்கத்தை வெறுக்கிறார்கள் அல்லது நேசிக்கிறார்கள்.
சிலருக்கு இது தங்களின் நாளை மீண்டும் ஆற்றலுடன் தொடங்குவதற்கான உந்துதலை தருகிறது ஆனால் சிலருக்கு இது தவறான ஒரு ஓய்வு முறையாக தெரிகிறது.
எனவே இவர்கள், நடப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது அல்லது தியானம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என மெட்நிக் தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
- பிபிசி தமிழில் 2021இல் அதிகம் படிக்கப்பட்ட 10 கட்டுரைகள் எதைப் பற்றியவை?
- வேலூரில் தொடர்ந்து உணரப்படும் நில அதிர்வுகளுக்கு காரணம் என்ன?
- 'எமோஷனலாக சத்தம் போட்டுவிட்டேன்' - தூத்துக்குடி தனியார் நிறுவனத்தோடு மோதிய தி.மு.க எம்.எல்.ஏ
- ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்
- மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் சாதனை
- மாஸ்டர் முதல் அண்ணாத்த வரை: 2021 தமிழ் திரைப்படங்களில் பெண்கள் என்ன செய்தனர்?
- தமிழ்நாட்டில் தடுப்பூசி: சிறுவர்களுக்கு முதல் டோஸ், முதியோருக்கு 3ஆவது டோஸ் எப்போது?
- பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை
















Click it and Unblock the Notifications