மிரள வைக்கும் 'காமா'.. பிரேசிலில் கொரோனா தொற்றால் குழந்தைகள் அதிகம் இறக்க காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

ரியோ டி ஜெனிரோ : நவீன வரலாற்றில் பிரேசிலில் தொற்று நோய்களால் ஏற்பட்ட பேரழிவை நிச்சயம் எழுத வேண்டும். உலகிலேயே தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அதிகமாக குழந்தைகள் இறக்கும் நாடு என்றால் அது பிரேசில் தான். ஏழ்மையும், வறுமையும் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளே இத்தகைய துயர நிலைக்கு ஆளாகிறார்கள்.

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் பிரேசிலில் டெங்கு பரவ தொடங்கிய போது , இறந்து போனவர்களில் பாதிக்கும் மேல் குழந்தைகள் என்பது சோகமான கசப்பான உண்மை. இதேபோல் 2015 ஆம் ஆண்டில் கர்ப்பிணிப் பெண்கள் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டபோது, 1,600 க்கும் மேற்பட்ட புதிதாகப் பிறந்த பிரேசிலிய குழந்தைகள் பேரழிவு தரும் மைக்ரோசெபலி பிறப்புக் குறைபாடுகளுடன் பிறந்தனர். வேறு எந்த நாட்டையும் விட அதிகம் ஆகும்

இதில் உச்ச கட்ட கொடுமை என்னவென்றால் . சுவாச வைரஸ்கள் தொடர்ந்து பிரேசிலின் குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன, அதே நேரத்தில் பிரேசின் ஏழை கிராமப்புறங்களில். ஹூக்வார்ம்கள் மற்றும் பிற குடல் ஒட்டுண்ணிகள் குழந்தை பருவ வளர்ச்சியையும் தடுக்கின்றன.

ஐந்து வயது குழந்தைகள்

ஐந்து வயது குழந்தைகள்

இப்போது கொரோனா வைரஸ் உலகின் எந்த பகுதிகளில் இல்லாத அளவிற்கு இளம் பிரேசிலிய குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசு சாரா அமைப்பான வைட்டல் ஸ்ட்ராடஜீஸின் டாக்டர் பாத்திமா மரின்ஹோ மேற்கொண்ட ஆய்வில், 10 வயதிற்கு உட்பட்ட 2,200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா பாதிப்பால் (கோவிட் -19) இறந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை பிரேசிலின் மொத்த கொரோனா இற்பபான 467,000ல் 0.5 சதவீதத்திற்கும் குறைவாகும். கொரோனாவால் பிரேசிலில் 900 க்கும் மேற்பட்ட (5 வயதிற்குட்பட்ட) குழந்தைகள் இறந்துள்ளன. உலகிலேயே அதிகம் பேரை பலி கொடுத்த அமெரிக்காவில் கொரோனாவல் இறந்தது 600,000 பேர். ஆனால் அவற்றில் 113 பேர் மட்டுமே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

என்ன சொல்கிறது

என்ன சொல்கிறது

அரசு சாரா அமைப்பான வைட்டல் ஸ்ட்ராடஜீஸின் தொடர்ந்து ஆய்வு குறித்து கூறும் போது, பிரேசிலின் மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் சாவோ பாலோ மாநிலத்தில் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று விகிதங்களை நாங்கள் ஆய்வு செய்தோம். எங்கள் பகுப்பாய்வில், 2020 ஆம் ஆண்டின் முடிவில் இருந்து பதின்வயதினர் மற்றும் குழந்தைகளிடையே பாதிப்பு இருந்ததும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அதிகமாக இருந்தது தெரியவந்தது. நாங்கள் பார்த்த மருத்துவமனைகளில் ஏறக்குறைய பாதி பேர், 900 க்கும் மேற்பட்டவர்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் இருந்தனர்.

எப்படி மாறும்

எப்படி மாறும்

கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியபோது, ​​கொரோனா வைரஸ் பெரியவர்களை விட குழந்தைகளை மிகக் குறைவாக பாதித்ததாக தோன்றியது. அப்புறம் ஏன் பிரேசிலில் பல இளம் குழந்தைகள் ஏன் கொரோனாவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போகிறார்கள்? பதிலை அடையாளம் காண முயற்சித்தோம். தென் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கொரோனா வைரஸ் தொற்றுநோய் எதிர்காலத்தில் எந்த பாதையில் செல்லக்கூடும் என்பதை இந்த ஆய்வில் அறிய வேண்டியது அவசியமாக இருந்தது.

அதிக பாதிப்பு

அதிக பாதிப்பு

ஏனெனில் தற்போது பிரேசிலின் அதிகரித்து வரும் குழந்தைகள் இறப்பு உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கி உள்ளது. இந்த வாரம் உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி, பிரேசிலில் கொரோனா வைரஸின் முக்கிய திரிபு பி 1 மாறுபாடு - இப்போது 'காமா' என்று அழைக்கப்படுகிறது. பீட்டாவைப் போலவே (பி. 1.351 மாறுபாட்டின் புதிய பெயர், இது முதலில் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது), காமா மாறுபாடும் முந்தைய வைரஸ் பரம்பரைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பரவக்கூடியது, இவைதான் குழந்தைகளிடையே அதிக தொற்றுபாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. காமா வைரஸ் தான் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றிற்கு அதிக காரணம் என்று நம்புகிறோம்.

குழந்தைகளுக்கு அதிகம்

குழந்தைகளுக்கு அதிகம்

நிச்சயமாக, குழந்தைகளிடையே கோவிட் -19 கேஸ்களின் அதிகரிப்பது 'காமா' கோவிட் வைரஸ் கட்டுப்பாடில்லாமல் பரவுவது காரணம் தான். கொரோனாவால் பாதிக்கப்படும் காமாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான நோய் மற்றும் குறைப்பிரசவங்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் கொரோனா வைரஸை புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அனுப்பலாம்.

என்ன சிக்கல் வரும்

என்ன சிக்கல் வரும்

ஆல்பா என்று அழைக்கப்படும் B.1.1.7 மாறுபாடு இப்போது அமெரிக்காவில் உள்ள அனைத்து கொரோனா வைரஸ் கேஸ்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் காரணமாக உள்ளது. காமா வைரஸ் அமெரிக்காவின் சில பகுதிகளில் விரைவாக பரவுகிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸில் காமா இப்போது 22.4 சதவிகித கேஸ்களுக்கு காரணமாக உள்ளது, இதற்கான கொரோனா வைரஸ் விகாரங்கள் மரபணு ரீதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன; மாசசூசெட்ஸில், தொடர்ச்சியான கோவிட் கேஸ்கள் 13.6 சதவீதம் காமா மாறுபாட்டால் ஏற்பட்டன.

காமா கொடூரம்

காமா கொடூரம்


காமா மாறுபாடு அமெரிக்காவில் தொடர்ந்து பரவி, தடுப்பூசிகளை விஞ்சிவிட்டால், உடனடியாக வைரஸ் குறைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் அல்லது புதியவற்றை அடையாளம் காண வேண்டும் என்று அபாய நிலை ஏற்படும். அத்துடன் வைரஸின் மாறுபாடுகளுக்கு ஏற்றவாறு தடுப்பூசிகளை உருவாக்கும் நிலை வரலாம். எனவே இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவதற்கும், இளைய குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை அங்கீகரிப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

என்ன காரணம்

என்ன காரணம்

பிரேசிலில் உள்ள கோவிட் -19 நெருக்கடி, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் போதுமான பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவாகும். அந்த நாட்டில் தடுப்பூசி விநியோகமும் போதிய அளவு இல்லை. மேலும் பரவக்கூடிய சூழ்நிலைகள் அதிகம் இருப்பதால் தான், தென் அமெரிக்காவிலும், இந்தியா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசிலும் இதேபோன்ற நெருக்கடிகள் உருவாகி உள்ளது. . அரசாங்கங்களும் உலகளாவிய சமூகமும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், கொரோனாவால் குழந்தைகள் எப்படியெல்லாம் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்ற அனுபவத்தை பிரேசில் உலகிற்கே இப்போது உதாரணமாக சொல்லி வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+