அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அண்மையில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் மற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய், தேர்தல் களத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டு வருகிறார். தற்போது தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

திமுகவால் தொடங்கப்பட்ட தமிழகத்தின் பிரதான மூன்று சமூக நலத்திட்டங்களின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குள் தலா ரூ.3,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளதாகத் தலைமைச் செயலக உயர்மட்ட வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கின்றன.

Tamil Nadu Budget Bonanza

மகளிர் உரிமைத் தொகை, தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களின் கீழ் இந்த நிதியுதவி ஒரே தவணையாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட உள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய அரசின் திட்டங்களை ஆய்வு செய்து அவற்றை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இதன் காரணமாக கடந்த மாதத்தில் இந்தத் திட்டங்களுக்கான தொகைகள் வழக்கமான தேதியை விடச் சற்று தாமதமாகவே பயனாளிகளுக்குக் விநியோகிக்கப்பட்டன. இத்தகைய சூழலில், இந்த மாதத்திற்கான தொகையை எவ்வித நிர்வாகத் தாமதமும் இன்றி தகுதியான பயனாளிகளின் கணக்குகளுக்கு உடனே கொண்டு சேர்க்கும் நோக்கில் தற்போதைய அதிரடி நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திட்டங்களின் மறுசீரமைப்பும் தற்போதைய அறிவிப்பும்

தவெக அரசு பொறுப்பேற்றவுடன் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாகத் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதி அளித்திருந்தது. தற்போதைய மாநில நிதிநிலை மேலாண்மை மற்றும் தகுதியான பயனாளர்களைத் துல்லியமாகத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, இத்திட்டம் தற்போது 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக தீவிரமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான 'புதுமைப் பெண் திட்டம்' மற்றும் மாணவர்களுக்கான 'தமிழ் புதல்வன் திட்டம்' ஆகியவையும் எவ்வித தொய்வும் இன்றி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதமும் நிர்வாக மற்றும் சீரமைப்புப் பணிகளால் சற்றே தாமதமாகக் கிடைத்த இத்தொகை, இந்த முறை தங்கு தடையின்றி, நடப்பு வாரத்திற்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் முழுமையாக டெபாசிட் செய்யப்பட உள்ளது முதல்வர் விஜய்யின் நேரடி மேற்பார்வையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று முக்கிய திட்டங்களின் முழு விவரங்கள்

மகளிர் உரிமைத் தொகை : குடும்பத் தலைவிகளின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் இத்திட்டத்தின் கீழ் தகுதியான மகளிருக்கு இந்த வாரத்தில் நிதி விடுவிக்கப்படும். வரும் ஜூன் 22 ஆம் தேதி, முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திட்டம் முழுமையாக புதிய வடிவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், இந்த மாதத்திற்கான விரைவான ரிலீஸ் பெண்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.

புதுமைப் பெண் திட்டம்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவித் தொகை தங்கு தடையின்றி மாணவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடையும்.

தமிழ் புதல்வன் திட்டம்: உயர்கல்வி பயிலும் மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கவும், அவர்களின் கல்விச் செலவுகளுக்கு உதவும் வகையிலும் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.

வெள்ளை அறிக்கை

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலவரம் குறித்து விரிவான 'வெள்ளை அறிக்கை' (White Paper) தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பெண்களுக்குப் பேருந்துகளில் இலவசப் பயணம், விவசாயக் கடன் தள்ளுபடி, மற்றும் இளைஞர்களுக்கான வேலையில்லாப் போன்ற பல்வேறு வாக்குறுதிகளால் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையிலும், அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளதாகத் துறை சார்ந்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ் இத்திட்டங்களை உடனுக்குடன் கண்காணிக்கவும், வங்கிப் பரிவர்த்தனைகளில் எந்தவிதத் தொய்வும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த 3-4 நாட்களில் இந்த ரூ.3,000 நிதியுதவி பயனாளிகளின் கைகளில் நேரடியாகக் கிடைக்கப் போவதால், தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், களத்தில் செயல்பாட்டுக்கு வருவதை இந்த அறிவிப்பு மீண்டும் நிரூபித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+