"மர்ம மரணம்!" சட்டென சரிந்த நவல்னி.. உயிரிழக்கும் முன் ரஷ்ய சிறையில் என்ன தான் நடந்தது? ஷாக் சம்பவம்
மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் உயிரிழந்தது குறித்த பரபர தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் அலெக்ஸி நவல்னி பல்வேறு குற்றச்சாட்டுகளில் இவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே நேற்று வெள்ளிக்கிழமை இவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இவரது மரணத்திற்கான காரணம் குறித்து ரஷ்யா சிறைத் துறை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், நவல்னி மரணத்திற்கு புதின் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே அலெக்ஸி நவல்னி உயிரிழக்கும் முன்பு அவரது கடைசி நாட்கள் எப்படி இருந்தது என்பதை விளக்கும் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அலெக்ஸி நவல்னி, சிறையில் இருந்தபடியே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும் வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. அதில் அவர் விசாரணைக்காகத் தனது செல்வம் காலியாவதாகவும் நீதிபதிகளின் சம்பளம் அதிகமாக இருப்பதாக ஜோக் அடிப்பதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது.
47 வயதான நவல்னி அந்த வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜரான இந்த வீடியோவை பார்க்கும் போது அவர் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது போலவே தோன்றுகிறது. நீதிமன்ற அதிகாரிகளும் கூட அவருடன் சேர்ந்து சிரித்து, பேசுவது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது.
ரஷ்யாவின் மிகவும் செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சி தலைவராக இருந்த நவல்னி, தொடர்ச்சியாக புதினை கடுமையாக விமர்சித்து வந்தார். புதின் செல்வம் அவரது ஆடம்பர வாழ்க்கையை நக்கலடிக்கும் வகையில் அவர் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். பல மாதங்கள் சிறையில் இருந்த அவர், கடைசியாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான சமயத்திலும் அவரது நகைச்சுவை உணர்வு அவரை விட்டுச் செல்லவில்லை.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான நவல்னி, "யுவர் ஹானர், நான் உங்களுக்கு எனது தனிப்பட்ட வங்கிக் கணக்கு தகவல்களை அனுப்புகிறேன்.. நீதிபதியாக உங்களுக்கு வரும் பெரும் சம்பளத்தையும் எனது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தையும் கொஞ்சம் பாருங்கள்.. ஏனென்றால் விசாரணை நீண்டு கொண்டு போவதால் எனது செல்வம் காலியாகி வருகிறது" என்றார்.
நவல்னியிடம் இருந்த பேனாவைப் பறிமுதல் செய்யச் சிறை அதிகாரி முயன்ற நிலையில், அது தொடர்பாக இந்த விசாரணை நடந்துள்ளது. சிறை அதிகாரியிடம் நவல்னி வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்த நிலையில், நவல்னிக்கு 15 நாட்கள் தனிமை சிறை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2021 முதல் சிறையில் இருந்து வரும் நவல்னி அவ்வப்போது சிறை விதிகளை மீறுவதால் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு வந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களில் 4 ஆவது முறையாக அவர் இதுபோல தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். இதுவும் கூட அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவர் தனிமை சிறையில் இருந்த போது அவருக்கு ஏதாவது நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அவரை கொல்ல ஏற்கனவே கடந்த 2020இல் முயற்சி நடந்த நிலையில், அதில் இருந்து அவர் தப்பினார். எனவே, அதையும் சிலர் இப்போது சந்தேகிக்கின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications