ஓ 'ஒசாமா': பின் லேடன் நினைவாக கவிதை எழுதிய 'ஒயிட் விடோ' சமந்தா

இங்கிலாந்தில் பிறந்த சமந்தா லூத்வெய்ட்(29) தனது இளம் வயதில் இஸ்லாத்தை தழுவினார். பின்னர் அவர் அல் கொய்தா அமைப்பில் சேர்ந்தார். அண்மையில் 70 பேர் பலியான நைரோபி வெஸ்ட்கேட் மால் தாக்குதலுக்கு பின் சமந்தா உள்ளதாக கூறப்பட்டது.
சம்தாவை இன்டர்போல் தேடி வருகிறது. இந்நிலையில் அவர் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு ஒரு கவிதையை எழுதி அர்ப்பணித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அந்த கவிதை இது தான்,
ஓ ஷேக் ஒசாமா என் தந்தையே, என் சகோதரரே உங்கள் மீதான என் அன்புக்கு ஈடில்லை.
ஓ ஷேக் ஒசாமா, நீங்கள் சென்றுவிட்ட நிலையில் முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும், அவர்கள் வலிமையாக இருக்க வேண்டும்.
நீங்கள் துவங்கியதை நாங்கள் தொடர்வோம். நாங்கள் உயிரை விடும்வரை வெற்றிக்காக போராடுவோம்.
முஸ்லிம் அல்லாதவர்கள் மனதில் பயத்தை உண்டாக்க. நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே உதாரணம்
முஸ்லீம்களே நம் அன்பான ஷேக்கின் வார்த்தைகளை கேளுங்கள். அவருடைய போராட்டமும், முயற்சியும் வீணாகிவிடக் கூடாது.
அவர் துவங்கியதை மீண்டும் துவங்கி வெற்றியை நோக்கி செல்லுங்கள்.
எங்கள் எதிரிகளுக்கு சொல்வதற்கு வார்த்தைகள் குறைவாக உள்ளன. நீங்கள் தவறானவர்களுடன் மோதுகிறீர்கள்.
அல் கொய்தா முன்பை விட வலுவாக உள்ளது. அது உங்களுக்கு வெற்றி இல்லை மிஸ்டர் ஒபாமா.
வீர மரணம் அடைந்த ஒசாமாவுக்கே கௌரவம் அனைத்தும்.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கென்யாவின் கடற்கரை நகரமான மொம்பாஸாவில் இருந்து தப்பிக்கும் முன்பு சமந்தா அழிக்க முயன்ற கம்ப்யூட்டர் மற்றும் பிளாஷ் டிரைவில் இருந்து தான் இந்த கவிதை உள்பட 2,000 பைல்களை போலீசார் எடுத்துள்ளனர். மேலும் சமந்தா தனது 4 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களும் கிடைத்துள்ளன.
இது தவிர சமந்தா தனது குழந்தைகளை தீவிரவாதிகளாக்குவது குறித்து எழுதி வைத்துள்ள டைரியும் கிடைத்துள்ளது. தனது குழந்தைகள் போராளிகளாக விரும்புகிறார்கள் என்பதை அவர் பெருமையாக தெரிவித்துள்ளார்.
சமந்தா தற்போது தான்சானியா அல்லது சோமாலியாவில் தலைமறைவாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications