அச்சுறுத்தும் புதிய வகை B.1.1.529 கொரோனா.. காற்றில் வேகமாக பரவும்.. ஆலோசிக்க கூடுகிறது "ஹூ"
ஜெனீவா: தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் புதிய வேரியண்ட் குறித்து விவாதிக்க WHO ஆலோசனைக் குழு இன்று கூடுகிறது.
தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் வேரியண்ட்டுக்கு B.1.1.529 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
B.1.1.529 பற்றி விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பரிணாம வளர்ச்சிக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (TAG-VE) வெள்ளிக்கிழமையான இன்று கூட உள்ளது.

புது பெயர்
புதிய வேரியண்ட், கேஸ்கள் போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் பதிவாகியுள்ளன. ஹூ கூட்டத்தில், இந்த வேரியண்ட் எப்படி குறிப்பிடப்பட வேண்டும் என்று நிபுணர்கள் விவாதிப்பார்கள். அநேகமாக கிரேக்க எழுத்துக்களில் இருந்து ஒரு பெயரை புதிய வேரியண்ட்டுக்கு கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று WHO அமைப்பின் டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.

கவலைக்குரிய விஷயம்
இதுவரை, WHO கோவிட்-19 இன் நான்கு வேரியண்ட்களை 'கவலைப்படத்தக்க வேரியண்ட்கள்' என கூறியுள்ளது. ஆல்பா (பி.1.1.7), பீட்டா (பி.1.351), காமா (பி.1) மற்றும் டெல்டா (பி.1.617.2) ஆகியவைதான், ஹூ அதிகம் கவலைப்படும் வேரியண்ட்கள். இப்போது, அந்த வரிசையில், பி.1.1.529 சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காற்றில் பரவுகிறது
பி.1.1.529 வேரியண்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை செயலிழக்க வைப்பதோடு வேகமாக காற்றிலும், பரவக்கூடியதாக இருக்கலாம் என்று தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் இந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
Recommended Video

வெளிநாட்டு பயணங்கள்
கொரோனா வைரஸ் வேரியண்ட்டின் பி.1.1.529 வகைக்கான எச்சரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில், "இந்த வேரியண்ட் கணிசமாக அதிக எண்ணிக்கையிலான உருமாற்றங்களை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால், சமீபத்தில் தளர்த்தப்பட்ட விசா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பார்த்தால், பொது சுகாதார பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழையும் அனைத்து சர்வதேச பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications