அச்சுறுத்தும் புதிய வகை B.1.1.529 கொரோனா.. காற்றில் வேகமாக பரவும்.. ஆலோசிக்க கூடுகிறது "ஹூ"
ஜெனீவா: தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் புதிய வேரியண்ட் குறித்து விவாதிக்க WHO ஆலோசனைக் குழு இன்று கூடுகிறது.
தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் வேரியண்ட்டுக்கு B.1.1.529 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
B.1.1.529 பற்றி விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பரிணாம வளர்ச்சிக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (TAG-VE) வெள்ளிக்கிழமையான இன்று கூட உள்ளது.

புது பெயர்
புதிய வேரியண்ட், கேஸ்கள் போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் பதிவாகியுள்ளன. ஹூ கூட்டத்தில், இந்த வேரியண்ட் எப்படி குறிப்பிடப்பட வேண்டும் என்று நிபுணர்கள் விவாதிப்பார்கள். அநேகமாக கிரேக்க எழுத்துக்களில் இருந்து ஒரு பெயரை புதிய வேரியண்ட்டுக்கு கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று WHO அமைப்பின் டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்.

கவலைக்குரிய விஷயம்
இதுவரை, WHO கோவிட்-19 இன் நான்கு வேரியண்ட்களை 'கவலைப்படத்தக்க வேரியண்ட்கள்' என கூறியுள்ளது. ஆல்பா (பி.1.1.7), பீட்டா (பி.1.351), காமா (பி.1) மற்றும் டெல்டா (பி.1.617.2) ஆகியவைதான், ஹூ அதிகம் கவலைப்படும் வேரியண்ட்கள். இப்போது, அந்த வரிசையில், பி.1.1.529 சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காற்றில் பரவுகிறது
பி.1.1.529 வேரியண்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை செயலிழக்க வைப்பதோடு வேகமாக காற்றிலும், பரவக்கூடியதாக இருக்கலாம் என்று தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் இந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
Recommended Video

வெளிநாட்டு பயணங்கள்
கொரோனா வைரஸ் வேரியண்ட்டின் பி.1.1.529 வகைக்கான எச்சரிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில், "இந்த வேரியண்ட் கணிசமாக அதிக எண்ணிக்கையிலான உருமாற்றங்களை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால், சமீபத்தில் தளர்த்தப்பட்ட விசா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பார்த்தால், பொது சுகாதார பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் நுழையும் அனைத்து சர்வதேச பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications