ஆட்டை கடித்து, மாட்டை கடித்து.. WHO தலைவரை குறிவைத்த இஸ்ரேல்! நூலிழையில் உயிர் தப்பிய டெட்ரோஸ்
சானா: ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இருந்து உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
பாலஸ்தீனம் மீதும், அதற்கு துணையாக நிற்கும் நாடுகள் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று ஏமன் மீது இஸ்ரேலின் விமானபடைகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டன. தலைநகர் சனாவில் உள்ள துறைமுகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100க்கும் அதிகமாக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதலின் போது சனா விமான நிலையத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இருந்திருக்கிறார்.

WHO தலைவர் டெட்ரோஸ் அதோனம், சனா விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர் தனது x தளத்தில், "விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது நாங்கள் அங்குதான் இருந்தோம். எங்கள் விமானத்தின் பணியாளர்களில் ஒருவர் காயமடைந்தார்" என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல் குறித்து ஐநாவும், உலக சுகாதார அமைப்பும் தொடர்ந்து கண்டித்து வருகிறது. இந்த தாக்குதலில் மக்கள் உயிரிழப்பு குறித்து இந்த இரண்டு அமைப்புகளும் பேசி வரும் நிலையில், WHO தலைவர் டெட்ரோஸ் அதோனம் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications