எப்ப பார்த்தாலும் மக்களை கொலை செய்வது பற்றியே பேசி வந்த உமர் மாட்டீன்
மயாமி: ஆர்லான்டோவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்து 50 பேரை சுட்டுக் கொன்ற நபர் மக்களை கொலை செய்வது குறித்து தன்னுடன் வேலை பார்த்த ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லான்டோ நகரில் இருக்கும் பல்ஸ் என்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்த உமர் மாட்டீன்(29) என்பவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 50 பேர் பலியாகினர், 50 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் உமர் மாட்டீன் பற்றிய விபரங்கள் பல கிடைத்துள்ளன.

உமர்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த தந்தைக்கு பிறந்தவர் உமர் மாட்டீன். நியூயார்க் நகரில் பிறந்த அவர் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் செயின்ட் லூசி பகுதியில் வசித்து வந்தார். 2007ம் ஆண்டு ஜி4எஸ் நிறுவனத்தில் சேர்ந்த அவர் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றி வந்தார்.

கொலை
உமர் தன்னுடன் பணியாற்றிய டேனியல் கில்ராய் என்பவரிடம் மக்களை கொலை செய்வது குறித்து பேசியுள்ளார். உடனே கில்ராய் இது பற்றி நிறுவனத்திடம் தெரிவிக்க கடுப்பான உமர் அவரை பின்தொடர்ந்துள்ளார். தினமும் 30 எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். உமரின் தொல்லை தாங்காமல் கில்ராய் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். உமர் எப்பொழுது பார்த்தாலும் மக்களை கொலை செய்வது பற்றியே பேசி வந்தார் என கில்ராய் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகள்
சில வாரங்களுக்கு முன்பு தான் உமர் இரண்டு துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். மயாமியில் தனது 3 வயது மகனுடன் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கையில் இரண்டு ஆண்கள் முத்தமிட்டதை பார்த்து கோபத்தில் கொந்தளித்துள்ளார் உமர்.

தொழுகை
பள்ளிவாசலுக்கு கடைசி ஆளாக தொழுக வரும் உமர் முதல் ஆளாக கிளம்பிவிடுவார் என இமாம் தெரிவித்துள்ளார். பள்ளிவாசலில் உமர் யாருடனும் பேசியது இல்லையாம். மிகவும் அமைதியாக இருந்ததாக இமாம் கூறியுள்ளார்.

மனநல பாதிப்பு
உமர் எதற்கெடுத்தாலும் தன்னை அடித்து வந்ததாக அவரின் முதல் மனைவி தெரிவித்துள்ளார். உமர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று தான் நடந்து கொண்டார். மதத்தின் மீது அவருக்கு பெரிய பற்று எல்லாம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications