தெருவில் பெண்ணை பார்த்ததுமே "ஷார்ட்ஸை" கழட்டிய நபர்.. ஆனா மறுநிமிஷமே நிர்வாணமாய் அலறி ஓடிட்டாரு.. ஏன்?
கராச்சி: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.. இதைப்பார்த்து பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் குலிஸ்தான்-இ-ஜௌஹரின் பிளாக் 4 என்ற சாலை உள்ளது.. இது எப்போதுமே பிஸியான சாலையாகும்.. இந்த பகுதியில்தான், அந்த வீடியோ பதிவாகி உள்ளது.

சாலையில் ஒரு பெண் பர்தா அணிந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தார்.. அப்போது இளைஞர் ஒருவர் பைக்கில் வந்து தன்னுடைய வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார்.. எதிரே நடந்து வந்துகொண்டிருக்கும் பெண்ணை பார்த்ததுமே, திடீரென தன்னுயை ஷார்ட்ஸை கழற்றிவிட்டு, நிர்வாணமாக நின்றுள்ளார்.. மேலும், அந்த பெண் அருகில் வந்ததும், அவரை நோக்கி அநாகரீகமாக சைகை காட்டியதுடன், பாலியல் தொந்தரவும் தந்துள்ளார்.
நிர்வாணமாக அந்த பெண்ணின் அருகில் நெருங்கி சென்ற இளைஞர், அவரை கட்டிப்பிடிக்கும் முயற்சியில் பின்னால் இருந்து தொடுவதற்கு முயற்சி செய்கிறார்.. இதற்காக, நிர்வாணமாகவே பெண்ணின் பின்னால் நடந்து செல்கிறார்.

இதை பார்த்து பதறிப்போன அந்த பெண், தன்னை தற்காத்துக்கொண்டு, அந்த இளைஞரை திருப்பி பதிலுக்கு தாக்குகிறார்.. துணிச்சலான அந்த பெண்ணின் தாக்குதலை பார்த்து பயந்துபோன இளைஞர், பின்வாங்கி, மெதுவாக அங்கிருந்து நழுவுகிறான். உடனே தன்னுடைய ஷார்ட்ஸை வேகவேகமாக அணிந்துகொண்டு, பைக்கில் ஏறி தப்பித்தும் சென்றுவிடுகிறார்.
அதிர்ச்சி வீடியோ: அந்த வீடியோவில் இதுவரை பதிவாகி உள்ளது.. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை. எனினும், சம்பவம் உண்மை என்று, சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதியாகி உள்ளதால், அதன் அடிப்படையில் போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.. குற்றவாளி யார் என்று தெரியவில்லை.. இன்னும் சிக்கவுமில்லை.. விரைவில் கைது செய்யப்படுவார்" என்று உறுதி தந்துள்ளார்.
Unknown man followed a girl on street and assaulted during day light. According to the reports, that area is Gulistan e Johar block 4, K.D.A scheme 36. Reportedly, there was no number plate on the bike.#TOKAlert #Karachi pic.twitter.com/dbibXvhGJT
— Times of Karachi (@TOKCityOfLights) July 4, 2023
யார் அவர்: எனினும், இந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.. அரசியல் கட்சியினரும் இதுகுறித்த கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
பிரச்சனை பெரிதாகி உள்ள நிலையில், சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி ஷா, இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்வதை உறுதி செய்து சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) மற்றும் கூடுதல் ஐஜி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தலைமறைவாகி உள்ள அந்த இளைஞரை தேடும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, சிந்து காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications