அமெரிக்க அதிபர் டிரம்ப் போடும் பெரிய பிளான்.. உக்ரைன் நினைத்தே பார்க்காதது.. ரஷ்யாவிற்கே சாதகமா?
முனிச்: போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு பதிலாக உக்ரைன் மீதே அமெரிக்கா அதிகஅழுத்தம் கொடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாக குற்றச்சாட்டி இருப்பதன் பின்னணி குறித்து வெளியாகி உள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷ்யா உக்ரைன் போரை எப்படியாவது விரைவில் முடிக்க விரும்புகிறார்கள், அதற்காக உக்ரைனை சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யச் சொல்லி வலியுறுத்துகிறார். இது ஐரோப்பா முழுவதுமே கடந்த சில வாரங்களாகவே விவாதத்தில் இருந்து வருகிறது.
உலகின் பல்வேறு சந்தைகள் சரிவுக்கு காரணமாக அமைந்த போர் என்றால் அது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போர் தான். கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன.

அமெரிக்கா நிதி ஒதுக்க மறுப்பு
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கொட்டத்தை அடக்க உக்ரைனை ஆயுதம் போல் பயன்படுத்தி வந்த நிலையில், அதிகப்படியான நிதி செலவாகுவதை, அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்தாண்டு பொறுப்பேற்ற டிரம்ப்புக்கு பிடிக்கவில்லை.
போரில் உக்ரைனுக்கு தேவையில்லாமல் அதிக நிதி ஒதுக்கப்படுவதாக கூறி நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக கனிம வளம் நிறைந்த அந்த நாட்டின் சுரங்க உரிமையை கேட்டார். வியாபரியான டிரம்ப், வணிக கண்ணோட்டத்துடனே உக்ரைனை அணுகியது பேசு பொருளானது. இத்தனை நாட்களாக ஆதரித்து வந்த அமெரிக்காவே இப்படி பேசுகிறதே என்று உக்ரைன் ஆடிப்போனது.
சமரசம் சாதகமாக இல்லை
அத்துடன் முடியவில்லை பிரச்சனை.. போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் தலைமையிலான குழு தற்போது சமரசம் செய்து வருகிறது. கடந்த வாரத்தில் போர் நிறுத்தத்திற்கான அமைதி பேச்சுவார்த்தை அபுதாபியில் நடந்தது. இதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவே இல்லை. அதற்கு காரணம் ரஷ்யாவிடம் உக்ரைன் பல சமரசங்களை செய்யவேண்டியதிருந்தது. இதனை உக்ரைன் ஏற்க மறுத்தது.
இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்துக்கான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அடுத்த வாரம் நடக்கவுள்ளது. இதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள்.
உக்ரைனுக்கு அழுத்தம்
இதற்கிடையே ஜெர்மனியின் முனிச் நகரில் சர்வதேச பாதுகாப்புத்துறை மாநாடு நடந்து வருகிறது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் பேசியபோது உக்ரைன் மீது அதிக தளர்வு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அமெரிக்கா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டி பேசினார்.
சம்மதிக்க வைக்க முடியவில்லை
அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. போரை நிறுத்துவதற்கான அனைத்து வல்லமையும் டிரம்பிடம் உள்ளன. ஆனால் டிரம்ப் புதினை சம்மதிக்க வைத்ததாக தெரியவில்லை. தாக்குதல் இலக்குகள் மாற்றப்பட்டுள்ளதே தவிர நிறுத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
உக்ரைனுக்காக பேச யாருமே இல்லை
"அமைதி ஒப்பந்தத்தை ஏற்க அதிக அழுத்தத்திற்கு உக்ரைன் உள்ளாக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் தளர்ந்து போக வேண்டும், ரஷ்யாவுடன் பணிந்து போக வேண்டும் என்ற வகையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளை இணைக்காதது உக்ரைனுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. பேச்சுவார்த்தையில் எங்களுக்கு ஆதரவாக பேச ஒருவரும் இல்லாமல் இருக்கிறோம்" இவ்வாறு கூறினார்.
அமெரிக்காவின் திட்டம் என்ன
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுவது ஓரளவு உண்மை தான்.. ஏனெனில் ரஷ்யா, அமெரிக்கா உக்ரைன் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. இதில் ரஷ்யாவிற்கு ஆதரவாக அமெரிக்கா பேசுவதாக உக்ரைன் நினைக்கிறது. டிரம்ப் போரை விரைவில் முடிக்க விரும்புவதும், அதற்காக உக்ரைனை சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யச் சொல்லி வலியுறுத்துவதும் பேசுபொருளாக உள்ளது.ரஷ்யா பிடித்துள்ள சில பகுதிகளை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு அமைதி ஒப்பந்தம் செய்ய உக்ரைனை அமெரிக்கா வற்புறுத்துகிறதாம். இப்படி பேச்சுவார்த்தை நடத்தி போரை முடித்து வைப்பதற்ககு பலனாக உக்ரைனின் கனிம வளம் நிறைந்த சுரங்க உரிமைகளை அமெரிக்கா கேட்கிறதாம்.
உண்மை என்ன
இறுதியாக உண்மை இதுதான்.. அமெரிக்கா தனது பொருளாதாரச் சுமையைக் குறைக்கப் போரை உடனே நிறுத்த விரும்புகிறது. ஆனால் உக்ரைனோ, தங்கள் நிலத்தை மீட்டெடுக்காமல் அல்லது தங்களுக்குச் சாதகமான சூழல் அமையாமல் போரை நிறுத்தினால் அது ரஷ்யாவிற்குத்தான் வெற்றியாக அமையும் என்று கருதுகிறது. இதுதான் இருவருக்கும் இடையிலான தற்போதைய மோதலுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் சர்வதேச ஊடக நிபுணர்கள்..
-
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்! -
தமிழக இல்லதரசிகளுக்கு குட்நியூஸ்.. சமையல் அறைகளுக்கு நிம்மதி தரும் ரஷ்யக் கப்பல்












Click it and Unblock the Notifications