காசாவின் "இதய" பகுதியில் கை வைக்கும் இஸ்ரேல்.. மொத்தமாக திணறும் ஹமாஸ் படை.. அவ்வளவு தான் போலயே
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்போது இஸ்ரேல் போரின் அடுத்தக் கட்டத்தை தொடங்கியுள்ளது. இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த அக். 7ஆம் தேதி மிக மோசமான தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பலரும் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், பலரை பிணைய கைதிகளைகவும் ஹமாஸ் பிடித்துச் சென்றது.

இதையடுத்து பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்த இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது. முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், பிறகு மெல்ல படையெடுப்பையும் ஆரம்பித்தது. ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த இஸ்ரேல் காசா மோதல் இப்போது அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. இப்போது காசா நகரில் பல முக்கிய இடங்களை குறிவைத்து அங்குள்ள ஹமாஸ் படைகளை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அங்குள்ள பதுங்கு குழிக்குள் இருக்கலாம் என கூறப்படும் நிலையில், அதை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக காசா நகரின் இதய பகுதியை நோக்கி இஸ்ரேல் முன்னேறி வருகிறது. ஹமாஸ் குழு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் சுற்றி வளைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோசவ் கல்லன்ட் தெரிவித்துள்ளார். இதனால் காசா நகரில் இப்போது பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்போது காசா நகரில் இறங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம் மற்றும் பீரங்கிகளுக்கு ஒரே டார்கெட் தான்.. அதாவது காசாவில் இருக்கும் அனைத்து ஹமாஸ் பயங்கரவாதிகளையும் அவர்களின் உள்கட்டமைப்பு, அவர்களின் தளபதிகள், பதுங்கு குழிகள், தகவல் தொடர்பு அறைகள் தேடி அழிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு இலக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸின் மூத்த தலைவரான யாஹ்யா சின்வார் பதுங்கு குழியில் தனியாக உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதே சின்வார் தான் கடந்த மாதம் இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர் என்று அமைச்சர் யோசவ் கல்லன்ட் தெரிவித்துள்ளார். அவர் இப்போது தனிமையில் உள்ளதாகவும் அவரை குறிவைத்தே தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்தார். அதேநேரம் சின்வார் இப்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து ஹமாஸ் தரப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

காசாவின் முக்கிய இடங்கள், அதாவது பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கீழ் தொலைவுக்கு சுரங்கப்பாதைகள் உள்ளன. ஆயுதக் கிடங்குகள், தகவல் தொடர்பு அறைகள் மற்றும் போராளிகளுக்கான மறைவிடங்கள் என அனைத்தையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதைகளை அமைத்துள்ளன. அதையெல்லாம் குறிவைத்து இஸ்ரேல் இப்போது போரின் அடுத்த கட்டத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹமாஸ் வசம் மிக பெரிய சுரங்கப் பாதை நெட்ஓர்க் இருக்கிறது. அதை முற்றிலுமாக அழிக்க பல மாதங்கள் வரை ஆகும். அந்தளவுக்கு ஹமாஸ் வசம் நீண்ட சுரங்கப் பாதை இருக்கிறது. இது இஸ்ரேலுக்கும் தெரியும்.. இதன் காரணமாகவே இஸ்ரேல் தொடர்ச்சியாக நீண்ட போருக்கு தயாராக வேண்டும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications