திகில் படத்தைப் பார்த்து தோழியை சரமாரியாக கத்தியால் குத்திய 12 வயது சிறுமிகள்...
மில்வாக்கி: அமெரிக்காவில், விஸ்கான்சினை சேர்ந்த இரண்டு 12 வயது சிறுமிகள், தங்களது பள்ளித் தோழியையே கத்தியால் தாக்கிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த திங்களன்று அவர்கள் இருவரும் இணைந்து, அச்சிறுமியை ஒரு புதர்ப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கிட்டதட்ட 19 முறை கத்தியால் குத்தியுள்ளனர்.
ஒரு பயங்கராமான இணையதளத்தை பார்வையிட்டதன் விளைவாக இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

பலமான தாக்குதல்:
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கால்கள், தோள்பட்டை மற்றும் முக்கியமான பகுதிகளில் பலமாக தாக்கப்பட்டுள்ளார்.

உயிர் பிழைத்த சிறுமி:
சைக்கிளில் சென்ற ஒருவர், அச்சிறுமியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.தற்போது அவர் உயிருடன் உள்ளார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கு பதிவு:
தாக்குதல் நடத்திய இரண்டு சிறுமிகளும், கொலை செய்யும் உள்நோக்கத்துடன் இச்செயலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 சென்டிமீட்டர் கத்தி:
மேலும், 13 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தி ஒன்று, கைது செய்யப்பட்டுள்ள ஒரு சிறுமியின் கைப்பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தாக்குதலுக்கு இந்த கத்தி உபயோகிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இணையதளத்தின் விளைவு:
பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒரு சிறுமி பயங்கர திரில் கதைகளில் நாட்டமுள்ளவர்.அதன் விளைவாக கொலை செய்து பார்க்க ஆசைப்பட்ட அவர், மற்றொரு சிறுமியையும் கூட்டு சேர்த்துக் கொண்டு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் செயல்:
"நல்லவேளை கடவுள் கிருபையால் பாதிக்கப்பட்ட சிறுமி தப்பிவிட்டார்" என்று காவல்துறை உயர் அதிகாரி ருஸல் ஜாக் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நல்லவேளை தப்பிச்சோம்:
நல்லவேளை தமிழ்நாட்டில் பெண்கள் மிஞ்சிப்போனால் அதிகபட்சமாக குடுமிப்பிடி சண்டை அளவிற்குதான் "வன்முறை" யை கையாளுவார்கள் என்பது ஆறுதலான விஷயம்.












Click it and Unblock the Notifications