அதெப்படி திமிங்கலம்? வெறும் 90 ரூபாய்க்கு வாங்குன வீடு.. இப்ப 4 கோடி ரூபாய்.. அப்படி என்ன செய்தார்?
ரோம்: இத்தாலி நாட்டில் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு பெண் வாங்கிய வீடு ஒன்று இன்று 4 கோடி ரூபாயாம். 90 ரூபாய் வீடு 4 கோடி ரூபாய் என்கிற அளவில் மதிப்பு எப்படி உயர்ந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
வாழ்க்கையில இரண்டு விஷயம் மிகவும் முக்கியமானது, ஒன்று கல்யாணம், இன்னொன்று வீடு, இரண்டுக்குத்தான் நம் மக்கள் அதிக பணத்தை செலவு செய்வார்கள்.

குறிப்பாக தங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவாக உள்ளது. வெறும் கனவாகவே பலரது வாழ்க்கை முடிந்துவிடுகிறது. சிலருக்கத்தான் அது நிஜத்தில் சாத்தியமாகிறது. இது ஒருபுறம் எனில், என்றாவது மதிப்பு உயரும் என்று நினைத்து இடத்தையோ, வீட்டையோ வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்
அதற்காக சென்னை போன்ற நகரங்களில் கோடிகளை கொட்டவும் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.இப்படியா ஒரு சூழல் இருக்கும் நிலையில், ஒரு பெண் ஒரு யூரோ அதாவது வெறும் 90 ரூபாய்க்கு வீடு வாங்கி அதை கோடிக்கணக்கான மதிப்புள்ள இடமாக மாற்றி இருக்கிறார்.

17ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட வீடுகள் இத்தாலி நாட்டின் சிசிலி பகுதியில் அமைந்திருக்கின்றன. இவை 2019ம் ஆண்டு ஏலத்திற்கு வந்தன. இத்தாலிய அரசு சலுகை விலையி இந்த வீடுகளை ஒரு யூரோ, ஒரு வீடு , அதாவது 90 ரூபாய்க்கு ஒரு வீடு, அவங்க ஊர் மதிப்பில் ஒரு ரூபாய்க்கு ஒரு வீடு என்கிற திட்டத்தின் கீழ் ஏலமிட்டது.
இந்த திட்டத்தை பார்த்து ஆச்சர்யப்பட்ட அமெரிக்காவில் வசிக்கும் இத்தாலிய பெண் மெரடித் தப்போனே (43 வயது) (Meredith Tabbone) என்பவர் சூப்பராக ஒரு திட்டம் போட்டார். எப்படி என்றால் இவர் பூர்வீகம் சிசிலி பகுதிதானாம். அந்த கிராமத்தில் தான் மெரடித்தின் கொள்ளு தாத்தா வாழ்ந்த ஊராக இருந்திருக்கிறது.
அங்கு தான் 750 சதுரடி அளவிலான ஒரு வீடு சொத்து ஏலத்திற்கு வந்துள்ளது. அந்த வீட்டில் மின்சாரம், தண்ணீர், ஜன்னல் கதவுகள் போன்ற எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் இதை ஒரு யூரோ அதாவது ரூ.90 மட்டுமே கொடுத்து 2019இல் ஏலம் வாங்கினார் மெரடித். அந்த வீட்டை வாங்கியதுடன் அருகே உள்ள வீட்டையும் ரூ.27 லட்சத்திற்கு வாங்கி இரண்டையும் இணைத்து 3000 சதுரடி வீடாக மாற்றி புணரமைக்க தொடங்கியுள்ளனர். இதற்காக சுமார் இரண்டு ஆண்டுகள் முயற்சி எடுத்து 1.89 கோடி ரூபாய் பணத்தையும் செலவு செய்திருக்கிறாராம்.

புதிதாக புணரமைக்கப்பட்ட அந்த வீட்டில், 4 படுக்கை அறைகள், 4 குளியல் அறைகள், சமையல் அறை, டைனிங் அறை ஆகியவற்றை அவர் உருவாக்கி இருக்கிறார். இப்போது இந்த புதிய வீட்டின் மதிப்பானது ரூ.4.10 கோடியாக உயர்ந்துள்ளளதாம். 750 சதுர அடியை வெறும் 90 ரூபாய்க்கு வாங்கி அதை புணரமைத்து வீட்டையே வேறலெவலில் மாற்றிய பெண்ணை பலரும் பாராட்டுகிறார்கள்.
இது பற்றி அந்த பெண் மெரடித் கூறுகையில், நான் வாங்கும் போது வீடு மிகவும் மோசமான நிலையில் இருந்தது . ஆனாலும் இது மிகவும் வசீகரமாக இருந்தது! இது மிகவும் சுவாரஸ்யமான கட்டிடக்கலை இருப்பதை கண்டேன். அதனால் வாங்கினேன். இந்த வீடு 750 சதுர அடி, அதில் மின்சாரம், குடி நீர் அல்லது ஜன்னல்கள் இல்லை எனவே எதுவுமே இல்லை. இதையடுத்து அதை வித்தியாசமான முறையில் ஒரு கனவு இல்லமாக மாற்றியுள்ளோம்" என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications