நீதிமன்றம் சந்தித்த பல விசித்திரமான வழக்குகளில் இதுவும் ஒன்று! (+18 மட்டும் படிங்கப்பா)
ஹாங்காங்: பராசக்தி படத்தில் வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது, ஹாங்காங் நீதிமன்றம் ஒன்று சந்தித்த இந்த வழக்கை நினைத்தால்.
ஒரு பெண் தனது இரு மார்புகளாலும் போலீஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண் போராட்டாக்காரர்களை சமாளிப்பது ஆண் போலீஸாருக்கு சற்று சவாலானதுதான். இருப்பினும் ஹாங்காங்கில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்தது சற்று சிக்கலான விஷயமாகத்தான் உள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி ஹாங்காங்கில் பெரிய போராட்டம் நடந்தது. அப்போது ஒரு போலீஸ் அதிகாரி தன்னை தவறாக தொட்டு விட்டதாக போலீஸில் புகார் கூறியிருந்தார் என் லாய் யிங் என்ற 30 வயதுப் பெண்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் விசாரணையில் அந்தப் பெண்தான் தவறு செய்தார் என்று தெரிய வந்ததால் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் நிறுத்தினர்.
கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது அந்தப் பெண் கூறுகையில், சம்பவத்தன்று அந்த போலீஸ் அதிகாரி எனது பேக்கைப் பிடிக்க வரும் சாக்கில் எனது மார்புகளைப் பிடித்து விட்டார். இது மிகவும் அநாகரீகமான செயல் என்று வாதிட்டார்.
ஆனால் அவரது புகாரை நீதிபதியே மறுத்து விட்டார். நீதிபதி கூறுகையில், சம்பவத்தன்று நீங்கள் அந்த போலீஸ் அதிகாரியை உங்களது மார்புகளால் தாக்கி நிலை குலைய வைத்துள்ளீர்கள். இதுதான் உண்மையில் நடந்தது. ஆனால் பெண் என்ற சாதகத்தைப் பயன்படுத்தி அந்த போலீஸ் அதிகாரி மீது அபாண்டமாக பழி சுமத்தியுள்ளீர்கள் என்று கோபமாக குறிப்பிட்டார். அவரை குற்றவாளி என்றும் அறிவித்தார்.
கோர்ட்டில் வாக்குமூலம் பதிவு செய்த சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி சான் கா போ கூறுகையில், தனது இரு மார்புகளாலும் எனது கையில் தாக்கினார் இப்பெண் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications